Sunday, January 12, 2014

பொங்கல் வாழ்த்து !



பொங்குக பொங்கல் !

பொங்குகவே பொங்கல் பொங்குகவே
மங்களம் எங்கும் நிறைந்திடவே
மாநிலம் முழுதும் செழித்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தித்திக்கும் கரும்பின் சுவையும்
தெவிட்டாத பொங்கலின் ருசியும்
என்றும் வாழ்வில் நிலைத்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

உலக அமைதியின் ஊற்றுக்கண்ணாய்
உலகசமாதான  தூதர்களாய் செயல்படும்
ஒப்புயர்வற்ற தமிழர்களின் வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தங்கத் தமிழாம் எந்தமிழை
சந்தம் மாறாமல் முழங்கி
சங்கம் வளர்த்திட்ட தமிழர்வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தரணி புகழும் தமிழின்
தலைமகனே தன்மானமிக்க தமிழனே
உங்கள் அனைவரின் வாழ்விலும்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

உலகாளும் உயர்செம் மொழியாம்
எங்கள் தாய்த்தமிழ் மொழியின் 
வளர்ச்சிக்கு உழைப்போர் இல்லங்களில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

அன்புடன் ………….
கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை – 635207
அலைபேசி: 9842712109 / 7402732132, தொ.பே: 04341-223011/223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com

No comments:

Post a Comment