Tuesday, February 25, 2014

8-ம் வகுப்பு தேசிய திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் முடிவுகள்........

     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

         இந்த ஆண்டுக்கான திறனாய்வுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகம் முழுவதும் 520 மையங்களில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர்.
 
       இதன் முடிவுகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் திரு  கே. தேவராஜனிடம் கேட்டபோது, ‘‘விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த பிறகு, கணினியில் மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை 3 வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்

No comments:

Post a Comment