Monday, July 9, 2018

ENGLISH READING PRACTICE FOR PRIMARY STUDENTS

கூட்டுறவு சங்கத் தேர்தல்: 23ஆம் தேதி தீர்ப்பு.....



கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், வேட்பு மனு ஏற்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உரிய விளக்கமின்றி மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி திமுக கொறடா சக்கரபாணி, கூட்டுறவுச் சங்கங்களில் போட்டியிட்டவர்கள் என 400க்கும் அதிகமானோர் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றக் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5ஆவது கட்ட தேர்தல்களை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்துக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் மதுரை உயர் நீதிமன்றதில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்துத் தரப்புகளும் எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி எழுத்துபூர்வமான வாதங்கள் கூட்டுறவு சங்க ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதனையடுத்து இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

மாணவர்களின் நலன் காக்கும் ராகிங் தடுப்பு 'ஆப்':-மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம்!



மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் துவக்கப்பட்ட, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' குறித்து கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.2017ம் ஆண்டு மே மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உதவியுடன், யு.ஜி.சி., சார்பில், ராகிங் தடுப்புக்கான பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.


மாணவர்கள் ராகிங் புகார்களை நேரடியாக இச்செயலில் பதிவு செய்வதற்கும், புகாருக்கான நகல் எடுக்கவும், புகார் சார்ந்த நடவடிக்கை செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த செயலிகளை, அதிகம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இதுபோன்ற செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லை.2018---2019ம் கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், கல்லுாரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல், குழு உறுப்பினர்கள் விபரங்களை தகவல் பலகையில் ஒட்டுதல், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பேராசிரியர் அழகர்சாமி கூறுகையில், ஒரு சில கல்லுாரிகளில், ராகிங் புகார்கள் காவல்நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல், மறைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு கிடைக்காமல், பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இனி, இச்செயலி மூலம் மாணவர்கள் புகாரை பதிவு செய்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து, பயன்பாடு குறித்து, அறிந்து வைத்திருப்பது அவசியம்,'' என்றார்.

SCERT- தொடக்க/நடு/உயர்/மேல்நிலை ஆசிரியர்களுக்கு காணொலி மூலம் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்