Monday, May 26, 2014

துறைத் தேர்வு முடிவுகள் - அரசு அறிவிக்கை

Department Exam Bulletins Download

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013)Download
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)Download

Saturday, May 24, 2014

வருவாய் மாவட்ட வாரியான +2 தேர்ச்சி விகிதப் பட்டியல்........

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.


           தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது

        வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

மாவட்டம்      தேர்ச்சி /விகிதம் (%)       பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு             97.88              334

கன்னியாகுமரி      97.78              391


நாமக்கல்           96.58              298


விருதுநகர்          96.55              325

கோயம்பத்தூர்       95.6              502

கிருஷ்ணகிரி        94.58             356

திருப்பூர்             94.38             312

தூத்துக்குடி          94.22             278

சிவகங்கை          93.44             256


சென்னை            93.42            589

மதுரை              93.13            449


ராமநாதபுரம்         93.11            227

கரூர்                92.71            180

ஊட்டி               92.69            177

தஞ்சாவூர்           92.59             390


திருச்சி              92.45            396

பெரம்பலூர்          92.33            124


திருநெல்வேலி       91.98            448

சேலம்               91.89            473

புதுச்சேரி             91.69            279

தர்மபுரி              91.66            285

புதுக்கோட்டை        90.48            295

திண்டுக்கல்          89.84            317

திருவள்ளூர்          89.19            580


காஞ்சிபுரம்           89.17            565

தேனி                87.66            184

வேலூர்              87.35            566

அரியலூர்            84.18            149

திருவாரூர்           84.13            203

கடலூர்              83.71            385

விழுப்புரம்           82.66            534

நாகப்பட்டினம்       82.28             263

திருவண்ணாமலை   77.84            450

Wednesday, May 14, 2014

அரசு மருத்துவக் கல்லூரி - எம்பிபிஎஸ் விண்ணப்பம் விற்பனை

எம்பிபிஎஸ் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் விற்பனை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம்

கோப்பு படம்
 
       தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில்மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383) இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதமான 2,172 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1,000 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்களும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் சுமார் 900 இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகிறது. 

   2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம். விலை ரூ.500. தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது சாதிச் சான்றிதழின் 2 நகல்களை கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில், ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், 162, பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் - எம்பிபிஎஸ்

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களுக்கும் துவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்ப விநியோகம் கடந்த மே 2-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. விண்ணப்ப விற்பனை ஜூன் 10-ஆம் தேதி வரைநடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும்ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொலை தூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.


     அஞ்சல் மூலம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.1550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை ​(D‌e‌m​a‌n‌d D‌r​a‌f‌t)​ பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ​(R‌e‌g‌i‌s‌t‌r​a‌r,​​ A‌n‌n​a‌m​a‌l​a‌i U‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y)​ என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்-608002 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
  தனி கலந்தாய்வு: மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.

  சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்கிறார் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா.

எத்தனை இடங்கள்? எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களும் உள்ளன.

கட்டணம்: எம்பிபிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.5,54,370; பிடிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.3,50,370.

   விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் w‌w‌w.a‌n‌n​a‌m​a‌l​a‌i‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n-​இல் தெரிந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Monday, May 5, 2014

திறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

            கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
            தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம்.
                8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST