Monday, November 10, 2014

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது


         அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது.

        அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.


          அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

           இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

   அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். ‘பாஸ்’ செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். ‘ஃபெயில்’ ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற ‘பாஸ்’ மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த மாற்றம்?

               கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது

TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

          TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொண்டு, அதற்கு அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும். சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.


Supreme court case appeared. Lawyer msg.

Full details:

              SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

Thursday, November 6, 2014

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியை பிற மாநிலங்களில் வழங்க தடை

            தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் தொலைதூர கல்வியை வழங்க யுஜிசி தடைவிதித்துள்ளது. தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தொலைதூர கல்வி திட்டத்தில், வீட்டில் இருந்து கொண்டோ அல்லது வேலை பார்த்து கொண்டோ படிக்கலாம். இந்த கல்வியை தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள 10 பல்கலைக்கழகங்களும், சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் தொலைதூர கல்வி மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானிய குழு, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே தொலைதூர கல்வியினை வழங்க வேண்டும்.
        பிற இடங்களில் தொலைதூர கல்வி மையங்களை தொடங்கக் கூடாது என்று கூறி ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்த கடிதம் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்விதுறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் யுஜிசிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பல்கலைக்கழகத்திற்கு தொலைதூர கல்வியினால் கிடைத்து வரும் வருவாய் தடைபடும். பல்கலைக்கு வருமான இழப்பீடும் ஏற்படும். எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் தொலைதூர கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்கலாம்.
             மாநிலத்தின் மற்ற பகுதியில் தொலைதூர கல்வி வழங்க தமிழக அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழக பல்கலைக்கழகங்கள் வேறு மாநிலங்களில் தொலைதூர கல்வி வழங்க கூடாது. அதேபோல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தொலைதூர கல்வியை வழங்க வேண்டும். அதேபோல, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அனுமதியில்லாமல் தொலைதூர கல்வியை ஆரம்பித்தால் அவை ரத்து செய்யப்படும். எங்கள் கடிதம் கிடைத்த பிறகு, வெளிமாநிலங்களில் தொலைதூர கல்விநிலையம் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட கூடாது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு பிறகு மாணவர்களை சேர்த்து அவர்களை படிக்க வைத்தால் அந்த மாணவர்கள் பெறும் பட்டம் தகுதியற்றதாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலை மையம்
       சென்னை பல்கலைக்கழகத் துக்கு தமிழகத்தில் 40 மையங்களும், வெளிமாநிலத்தில் 50 மையங்களும், வெளிநாட்டில் 4 மையமும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 22 இளங்கலை படிப்புகள், 14 முதுகலை படிப்புகள், 9 முதுகலை அறிவியல் படிப்புகள், 16 டிப்ளமோ படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு......

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிக்கை (Notification) இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

     விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.
      விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.
தேர்வு நடைபெறும் நாள்: 10.1.2015
      ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-
தமிழ் - 277
ஆங்கிலம் - 209
கணிதம் - 222
இயற்பியல் - 189
வேதியியல் - 189

தாவரவியல் - 95
விலங்கியல் - 89
பொருளியல் - 177
வணிகவியல் - 135
உடற்கல்வி இயக்குநர் - 27
வரலாறு - 198

Wednesday, November 5, 2014

ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு
    1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

     இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன.
   இதில் தங்கள் கருத்துருக்களை திரும்பப் பெற்றவர்களும், இனி அனுப்பும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் துறை அலுவலர்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணை எண், பணிப் பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்துக்கான முகாந்திரம், அரசு ஆணை எண். 363-ன்படி திருத்திய ஓய்வூதியத்துக்கு பணிப் பதிவேடு கிடைக்கவில்லை எனில், 4-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட அட்டவணை, ஓய்வூதியதாரரின் விருப்பப் படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் சார் கருவூலத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும்..
         மேலும் விவரங்களுக்கு "துணை மாநில கணக்காயர் (ஓய்வூதியம்), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 18' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் -5 மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோரி டிசம்பர் -5 ம் தேதி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

To observe “NATIONAL PROTEST DAY” ON 5th  December, 2014 All Over India along with all Central Trade Unions in India
------ooo-----
New Delhi, Nagpur,Mumbai,Ranchi, Bangalore, Cochin; 24/10/2014;

Central Government Employees Confederation (CGEC); National Organisation of Central Government Employees (NOCGE) and INTUC have unanimously resolved to observe “ NATIONAL PROTEST DAY” on 5th  December, 2014 all over India along with all Central Trade Unions in India (Viz: INTUC, BMS, CITU, HMS, AITUC, TUCC, AIUTUC, AICCTU, UTUC,SEWA, LPF and all Federations of Banks, Railways (NFIR & AIRF), Defence (INDWF & AIDEF), Insurance, Central/State Govt. and other Service Establishments Employees).


Demands
========

1. Central Govt. should desist from its unilateral move to amend Labour Laws and consult and honour the views of Central Trade Unions.


2. Central Govt. should withdraw the retrograde move in allowing/hiking Foreign Direct Investment (F.D.I.) in Defence Sector, Railways, Insurance, PSUs and other Sectors.

3. Restore minimum wages of Rs.15,000/- to all the Unorganised/Contract Workers and Minimum Wages of Rs.26,000/- to the lower paid employees of Central Government.

4. Demands of Bank Officers and Bank Employees should be immediately accepted in respect of their Wage Revision and other privileges and social security measures, which are over due (Go through the Circulars dated 14/10/2014 & 16/10/2014 issued by the UFBU, AIBOBOA, INBOC, INBEC and INBEF etc.)

5. Strict implementation of existing Labour Laws concerning the Welfare of the Working Class all over India.

6.Benefits of Regular Workers should be given to all Contract Workers.
7. Compulsory Registration of Trade Unions within 45 days and all the ILO Conventions meant for the Workers should be ratified by the Govt. Of India.

8. 50% D.A. of Central Staff should be merged with Pay and Interim Relief should be paid to all employees, pending finalisation of the 7th Central Pay Commission.

9. Minimum 4 Promotions should be given to all Central Govt. Officials, without the hindrances of Departmental Examinations and DPC proceedings, on or before their respective date of retirements.2

10. MACP/ACP benefits should be extended to all Central Government Employees, including the staff of Autonomous Body/Semi-Govt. Departments.

11. Bonus eligibility and Bonus Ceiling should be raised as per the present Price Index Cost of Living and Updated Model of Pay Structure.

12. Present quantum of Pension should be raised with adequate Medical facilities/Medical Allowance and the New Pension Scheme should be liberalised as Worker-Friendly.

Accordingly, all the Unions, Associations and their Federations are requested to observe  “NATIONAL PROTEST DAY” on 5th  December, 2014 by way of Mass Demonstrations and Mass Protest Meetiungs & Rallies all over India and give wide publicity through Newspapers, T.V.

Channels and AIR/Doordarshan etc. Concerned Office-bearers are requested to send a report after observing the above programme of action to the undersigned on or before 15/12/2014.