Saturday, February 28, 2015

08.03.2015 ஜேக்டோ ஆற்பாட்ட பேரணி ஆயத்த ஆசிரியர் சந்திப்பு......

                  ஊத்தங்கரை ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற அனைத்து துவக்க மற்றும் உயர்துவக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து வரும் 08.03.2015 ல் நடைபெற உள்ள ஜேக்டோ சார்பிலான மாபெரும் ஆற்பாட்ட பேரணியில் கலந்துக்கொள்ள வேண்டி அழைப்பு விடுத்தோம்.











Friday, February 27, 2015

பள்ளிகளில் குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது குழந்தைகளின் பாதுகாப்பு சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்......

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வு

      பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு

Wednesday, January 14, 2015

புத்தாண்டு, பொங்கல் சந்திப்பு..........

             தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களைச் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
             புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் பொருட்டு இன்று 14.01.2015 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அ.க.இ) திரு பொன்.குமார் அவர்களையும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜி. இராஜேந்திரன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டோம்.










Friday, January 9, 2015

தொடக்கக் கல்வி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரை

          தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 01.01.2015 அன்றைய நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு .......


                தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், ஏ, பி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சி,டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 வரையிலும் போனஸாக அளிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
            ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ், சிறப்பு போனஸ் ஆகியன தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம்: கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கு சி, டி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்குள்பட்டு 30 நாள்கள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஏ, பி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து வருவோருக்கு சிறப்புமிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதாவது, சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள், ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்பு நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த சிறப்பு மிகை ஊதியம் அளிக்கப்படும்.
            உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை-சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
           ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
பொங்கலை ஒட்டி வழங்கப்படும் போனஸ், சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு ரூ.326.49 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.