Friday, May 20, 2016

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர இன்று (20.5.2016) வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம்.   
           இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 20.5.2016 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது: தமிழகத்தில் 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), 34 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 321 தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.
     இங்கு 2 ஆண்டு கால தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வழங்கப்படுகிறது. மேற்சொன்ன ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 830 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2016-17-ம் கல்வி ஆண்டில் இடை நிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் மே 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 10-ம் தேதி வரை வழங்கப்படும். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் மாவட்ட ஆசிரி யர் பயிற்சி நிறுவனங்களிலும் விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதிச் சான்றிதழ் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார். 
 

துறைத் தேர்வுகள் - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு...

TNPSC : Departmental Examinations- May 2016 Hall Ticket Published

TNPSC - Departmental Examinations, May 2016

Memorandum of Admission (Hall Ticket) Published

(Dates of Examinations: 24.05.2016 to 31.05.2016)

Download in www.tnpsc.in

தமிழக பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு விண்ணப்ப நாள் அறிவிப்பு....

TAMIL NADU ENGINEERING ADMISSIONS - 2016 (TNEA 2016) | LAST DATE 25.05.2016

TAMIL NADU ENGINEERING ADMISSIONS - 2016 (TNEA)

தமிழ்நாடு முழுவதும் 538 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் இடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதுவரை, 190438 மாணவ - மாணவிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 118079 பேர் விண்ணப்பத்திற்கான பணத்தையும் செலுத்தியுள்ளனர்.
பதிவு செய்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்த பிறகு அவர்கள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னர் அதை பதிவிறக்கம் செய்து, பிளஸ்-2 முடிவு வெளியான 10 நாட்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துசேரும்படி தபாலில் அனுப்ப வேண்டும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பு.


பலரின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்த ””நோட்டா””

'நோட்டா'வுக்கு ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்கு

தமிழகத்தில் நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீதம் ஆகும்.

              தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 232 தொகுதிகளில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகின.மேலும், இது கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட பல மடங்கு அதிகம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில், லட்சக்கணக்கானோர் எந்த கட்சிக்கும் வாக்கில்லை என்பதைகுறிப்பிடும் விதமாக நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகள் பெற்ற வாக்கைவிட நோட்டாவுக்கு அதிகமாக வாக்கு கிடைத்துள்ளது.கோவையில், 10 தொகுதிகளிலும் பதிவான நோட்டா மற்ற எல்லா தொகுதிகளிலும் பதிவான நோட்டாவைக் காட்டிலும் மிக மிக அதிகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு. .

              தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 
           இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நிகழாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை முதல் கட்டமாக மே 1, இரண்டாம் கட்டமாக ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.மேலும், இந்தத் தேர்வுகளின் முடிவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் செப்டம்பர் 30ஆம்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக அரசு, வேலூர் சிஎம்சி உள்ளிட்டபல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது.

சங்கல்ப அறக்கட்டளை என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில்"நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது' என முறையிட்டிருந்தது.இந்நிலையில் தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sunday, April 3, 2016

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை - அரசாணைக்கு தெளிவுரை கடிதம்



                 தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை, இறந்த, பணி ஓய்வு பெற்ற, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு முடித்தல் சார்பான அரசாணைக்கு தெளிவுரை கடிதம் நாள் : 01. 04. 2016