Monday, October 14, 2024
தேசியத் திறனாய்வுத் தேர்வு - சிறப்பு வகுப்புகள் துவக்கவிழா...
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று தேசியத் திறனாய்வுத் தேர்வு - சிறப்பு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ.ப் சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழஙகினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் தேசியத் திறனாய்வுத் தேர்வின் முக்கியத்துவம், மற்றும் அதில் பங்கு பெறுவதால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மிக விரிவாக விளக்கினார். அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஆண்டுதோறும் நடத்தப்படுவது தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு ஆகும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு (9,10,11,12 வகுப்புகளுக்கு) மாதம் ₹1000 வீதம் அரசாங்கத்தால் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
Monday, September 16, 2024
தமிழ் ஆளுமை விருது.....
ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கவி. செங்குட்டுவன் எனும் செ. இராஜேந்திரன் அவர்களுக்கு இன்று சென்னையில் நிகழ்வில் *தமிழ் ஆளுமை விருது* வழங்கப்பட்டது.
சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் இன்று (15.09.2024) அதன் தலைவர் பாவரசு பாரதி சுகுமாரன் தலைமையில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில் 133 பேர் எழுதிய திருக்குறள் களஞ்சியம் 3 தொகுதிகள் வெளியீடு, இதை எழுதிய ஆளுமைகளுக்கு திருக்குறள் ஆய்வு நெறிச் செம்மல் விருது வழங்குதல், அர்ப்பணிப்பு உணர்வுடன், தொடர்ந்து தமிழ் பணியாற்றி வருபவர்களுக்கு *தமிழ் ஆளுமை விருது* வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பணியாற்றி வரும் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன் அவர்களுக்கு *தமிழ் ஆளுமை விருது* செவாலியே வி.ஜி. சந்தோஷம் அவகளால் வழங்கப்பட்டது.
எவ்வித விண்ணப்பமோ, பரிந்துரையோ இல்லாமல் வழங்கப்பட்டதே இவ்விருதுக்கான சிறப்பு ஆகும். நிகழ்வில் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் திரு முகுந்தன், மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் கோ. சத்தியமூர்த்தி, தமிழ்நாடு காவல்துறை நுன்னறிவு பிரிவுத் துறை தலைவர் திருநாவுக்கரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆய்வாளர் மணவழகன், பேராசிரியர் முனைவர் சுலோச்சனா, தமிழ்நாடு காவல் துறை சிலை தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர்
சிவக்குமார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர். தூயதமிழ் வேந்தர் வெற்றி வேந்தன் எனும்
விஜயராகவன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பொன். குமார், புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு முத்து உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
Subscribe to:
Posts (Atom)