Wednesday, December 14, 2022

4 & 5 வகுப்புகளுக்கு - இரண்டாம் பருவத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யத் தேவையான இணைய பக்கம்....

 4 & 5 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் - பருவத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பள்ளியின் UDISE எண் & கடவுச்சொல் உள்ளீடு செய்து 15.12.22 முதல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ..

4 & 5 வகுப்புகளுக்கு இரண்டாம் - பருவத் தேர்வு நடத்துதல் சார்ந்து....SCERT இயக்குநரின் செயல்முறைகள்...

 4 & 5 வகுப்புகளுக்கு இரண்டாம் - பருவத் தேர்வு நடத்துதல் சார்ந்து....SCERT இயக்குநரின் செயல்முறைகள்... 

Click here to download pdf

தமிழ்நாடு அமைச்சர்களின் துறைகள் மாற்றம்.......

 IMG-20221214-WA0002

தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு;

* அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

* வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு

* கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்

* சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு

* விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்

* அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு

அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு

அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி விளக்கங்கள் - நிதியாண்டு 2022-2023 ( தமிழில்...)


.com/

வருமான வரி விளக்கங்கள் - நிதியாண்டு 2022-2023 

நிதியாண்டு 2022-2023 / மதிப்பீடு ஆண்டு 2023-2024 வருமான வரியில் ஏற்பட்ட மாற்றங்கள்

 INCOME TAX TAMIL BRIEFING - Download here...

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.......


.IMG_20221214_072454

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது TNPSC

IMG_20221214_072446

Applications are invited from eligible candidates only through online mode upto 13.01.2023 for direct recruitment to the vacancies in the post of District Educational Officer ( Group - I C Services ) in School Education Department included the Tamil Nadu School Educational Service

DEO Recruitment Notification 2022.pdf - Download her

Friday, December 9, 2022

வட்டாரக் கல்வி அலுவலருக்கு மீண்டும் தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்கும் அதிகாரம்........

    வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு  மீண்டும் தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்கும் அதிகாரம் மற்றும் வருங்கால வைப்புநிதி முன்பணம் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் தெளிவுரை.......
 

இரண்டாம் பருவம் தொகுத்தறிவு தேர்வு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்துவது சார்ந்து SCERT இயக்குநரின் புதிய செயல்முறைகள் .....

     இரண்டாம் பருவம் தொகுத்தறிவு தேர்வு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்துவது சார்ந்து SCERT இயக்குநரின் புதிய செயல்முறைகள் .........

 

Click here to download pdf

Thursday, December 8, 2022

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தேதி மாற்றம் (டிசம்பர் 12.12.22,13.12.22) -மற்றும் கூட்டப் பொருள் சார்ந்து -பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ...



அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது...

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு......




    நாளை மறுநாள் 10.12.22 சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான TRUST EXAM எனப்படும் கிராமப்புற   ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் மழை காரணமாக, அடுத்த வாரம் சனிக்கிழமை 17.12.22 அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.......

 


    ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது......

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 09.12.2022 விடுமுறை......

 

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 15 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 


* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

 

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

Wednesday, December 7, 2022

மாநில அளவிலான கலைத் திருவிழா - போட்டிகள் நடைபெறும் நாட்கள் அறிவிப்பு.......

 நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற உள்ளன.



இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக் கல்வித்துறை........

 

அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


 இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) கலந்தாய்வு 13/12/2022க்கு ஒத்திவைப்பு.......

 

தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) விருப்ப மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 06.12.2022 வரை நீட்டிக்கப்படுகிறது.


மேலும் , பணியிட மாறுதல் கலந்தாய்வு 13.12.2022 செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வியில் பயின்ற படிப்பும், கல்லூரி படிப்புக்கு இணையானது - UGC கடிதம்........

 தொலைதூரக்கல்வியில்  பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானதே UGC உத்தரவு நகல்.


மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி.........

 

மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல் 04.01.2023 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 


எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி

15..12.22
16.12.22
17.12.22

மாவட்ட அளவிலான பயிற்சி

19.12.22
20.12.22
21.12.22

ஒன்றிய அளவிலான பயிற்சி

02.01.23
03.01.23
04.01.23

முன்னதாக பயிற்சி தொடர்பான மாநில மற்றும் மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்த கடிதம்......

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு....

 

GO NO : 219 , Date : 02.12.2022

இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு

CONT.P.No.1355 of 2022 & BATCH COMPLIANCE ORDER - Download here

நேரடி பட்டதாரிகளையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்......

 கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியா் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘மனுதாரா், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளாா். அதன்பின்னா், இளநிலை ஆங்கிலத்தை தொலைநிலைக் கல்வி முறையின் கீழ் படித்துள்ளாா். எனவே, மனுதாரா் பதவி உயா்வுக்கு தகுதி பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவா்கள் ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியா்களாக உள்ள பெரும்பாலானோா் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவா்களாக இருப்பது துரதிா்ஷ்டவசமானது.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு ஆண்டுக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியா்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.

ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2022, தாள் 1 முடிவுகள் வெளியீடு.....

 

⚡👉To download the result follow the steps given below:-

⚡👉 TET Result Direct Link Available

 🔴👉Step 1 – Click Login

 🔴👉Step 2 – Enter User ID and password

 🔴👉Step 3 – Click Dashboard

🔴👉Step 4 – Click here to download score card


Friday, September 30, 2022

துறைத் தேர்வுகள் - டிசம்பர் 2022

 ⚡DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022*


*⭕ANNEXURE-I-INSTRUCTION- Click Here 

*⭕ANNEXURE-IV TIME TABLE -Click Here 

*⭕ANNEXURE-II - SYLLABUS- Click Here

*⭕ANNEXURE-III-FEES- Click Here

⭕ Notification- Click Here

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ் பயிற்சி ஏடு-PDF

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம்  

தமிழ்  பயிற்சி ஏடு-PDF

தமிழ் -அரும்பு-CLICK HERE

தமிழ் -மொட்டு -CLICK HERE

தமிழ் -மலர் - CLICK HERE

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் ENGLISH WORK BOOK -PDF

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம்   ENGLISH WORK BOOK  -PDF


ENGLISH  -Arumbu- CLICK HERE

ENGLISH  -Mottu  -CLICK HERE

ENGLISH -Malar - CLICK HERE

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் -கணிதம்- அரும்பு ,மொட்டு, மலர்-பயிற்சி ஏடு-PDF

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம்  -கணிதம்-  அரும்பு ,மொட்டு, மலர்-பயிற்சி ஏடு- WORKS BOOKS-PDF



MATHS -அரும்பு -CLICK HERE

MATHS -மொட்டு-CLICK HERE

MATHS -மலர்- CLICK HERE

Wednesday, September 28, 2022

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.....

 




சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2,346 இடங்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டுள்ள இன்று அதற்கான தர வரியை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணிய வெளியிட்டார்.இவை அனைத்திற்குமான கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவப்படிப்பிற்காக அரசு கல்லூரியில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. முதுகலை பல் மருத்துவத்திற்காக 31 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள், 94 பட்ட படிப்பு இடங்கள் என மொத்தம் 2,346 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்காக பெறப்பட்ட 6,960 விண்ணப்பங்களில் 6, 893 விண்ணப்பங்கள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட 2,025 விண்ணப்ப்பங்களில் 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதுகலை பல் மருத்துவத்திற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுளள்து. இதற்கான தரவரிசை பட்டியலை தற்ப்போது சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்......

 


    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ( 28.9.2022 ) தலைமைச் செயலகத்தில் , உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 
    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் , விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தெரிவு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு , 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு , தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

     அதன்படி , விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார் . அமைச்சர் இந்நிகழ்ச்சியில் , மாண்புமிகு உயர்கல்வித் துறை முனைவர் க.பொன்முடி , தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு , இ.ஆ.ப. , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் . தா . கார்த்திகேயன் , இ.ஆ.ப. , தொழில்நுட்ப கல்வி ஆணையர் திருமதி க . லட்சுமிபிரியா , இ.ஆ.ப. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

 



    தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்.....


IMG_20220928_153839


        மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஜூலை - டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்

Tuesday, September 27, 2022

SMC & கிராம சபா கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் , பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்........


   30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022  கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்.


ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முழு விபரம் .......

 


    தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பின்பு தேதி மாற்றியது.

    இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நடப்பு ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் கணினி வழித்தேர்வை (Computer Based Examination) பயிற்சி தேர்வுகளாக மேற்கொள்ள தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதனை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு , கலந்தாய்வு - அறிவிப்பு

    IMG-20220927-WA0016

    IMG-20220927-WA0017 

 12.09.2022 நாளிட்ட இயக்குநரின் செயல்முறைகளில் 31.12.2008 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 357 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் EMIS இணையதளம் வாயிலாக கீழ் குறித்தவாறு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


1)  1.1.2022 முன்னுரிமைப் பட்டியலில்  1 முதல் 250 வரை உள்ள நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  29.09.2022 அன்றும்

2) 251 to 356 வரை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 30.9.2022 அன்றும் Emis மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.



மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.......

 


    மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - செய்திக்குறிப்பு

    காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)

    பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.