Wednesday, November 27, 2013

2014ஆம் ஆண்டுக்கான விடுப்பு பட்டியல்

அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு


             அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு

              நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.


          பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர் கூறியதாவது: மத்திய அரசின், முதன்மை திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இவை, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் திறக்கப்பட உள்ளன.

    மேலும், தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Tuesday, November 19, 2013

மாவட்டப் பொருப்பாளர்கள் மாவட்ட அலுவலர்களைச் சந்தித்தல்......


                தமிழக ஆசிரியர் கூட்டணியின்  புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டப் பொருப்பாளர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி துரைசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு இரா. நடராஜன் ஆகியோரைச் சந்தித்தல்........







Monday, November 11, 2013

கல்வித் தகவல் மேலாண்மை - தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

        அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு


Sunday, November 10, 2013

தமிழக ஆசிரியர் கூட்டணி - கிருஷ்ணகிரி மாவட்டத் தேர்தல்






இன்று ஒசூரில் நடைபெற்ற  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் மாவட்டப் பொருப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளை தனது இதய பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மாவட்டத் தலைவர்        :                             திரு செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை
மாவட்டச் செயலாளர்       :                           திரு .மி. ஹபிபுர் ரஹ்மான், ஒசூர்
மாவட்டப் பொருளாளர் :                            திரு .எஸ். நவீத்அக்பர், தளி
 மகளிர் அணிச் செயலாளர்:                     திருமதி மு இந்திராகாந்தி, மத்தூர்
தலைமை நிலையச் செயலாளர்:            திரு . மனுநீதி, கெலமங்கலம்
துணைத் தலைவர்கள்:
1.   திரு .  முகம்மதுஜாகீர், ஒசூர்
2.   திரு எஸ். சையத்ஜலால்அகமத், கெலமங்லம்
3.   திருமதி வி. பட்டாணிச்சி, ஒசூர்
துணைச் செயலாளர்கள்
1.   திரு எசேக் ஞானம்ஆர்கேடி, சூளகிரி
2.  திரு .  வெங்கடேசன், மத்தூர்
3.   திருமதி . ஜோதி ,ஒசூர்
தணிக்கைக் குழு உறுப்பினர்கள்

1.  திருமதி இரா. சாந்தி, ஒசூர்
2.  திரு . இராஜசூரியன், ஊத்தங்கரை
மாவட்டத் தேர்தலை சேலம் மாவட்டச் செயலாளர் திரு ச. சந்திரசேகர், மாவட்டத் தலைவர் திரு உதயகுமார் ஆகியோர் ஆணையாளராக இருந்து நடத்திக் கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் திரு கோ முருகேசன் அவர்கள் கலந்துக்கொண்டார். மேலும் மாவட்டத்தின் அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.





















Tuesday, November 5, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள்

             தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

          தேர்வர்கள்  கீழ்கண்ட இணைப்பைச் சுட்டி அதில் தமது தமது தேர்வு எண்ணை கொடுத்து பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.

http://111.118.182.204/TET_Paper2_result/TET_Paper2_Result.aspx

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - தமிழக அரசு புதிய உத்தரவு

             அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

          இந்த உத்தரவையடுத்து கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகள் எளிமையாகின்றன. மேலும், வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக வேலைகளை நிரந்தரமாக்கும் பணிகள் இனி விரைந்து மேற்கொள்ளப்படும். 

           வாரிசுகளுக்குத் தரப்பட்ட தாற்காலிகப் பணியை வரன்முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் வாரிசுகளிடம் இருந்து 15 வகையான சான்றிதழ்கள் பெறப்பட்டன. வாரிசுகள் தற்போது பணிபுரியும் துறையின் உயர் அதிகாரியிடம் இந்தச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். இத்துடன், 18 வகையான பிரிவுகள் அடங்கிய ஒரு படிவத்தையும் சேர்த்துப் பெற்று அரசு பரிசீலனைக்கு அந்த அதிகாரி அனுப்பிவைப்பார். இவ்வாறு பலவகையான சான்றிதழ்களைத் திரட்டித் தரவேண்டியுள்ளதால் வாரிசுகளின் பணி நிரந்தரம் காலதாமதமாகிறது. இதைத் தவிர்க்கும்வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், கல்வி தகுதி மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல்களை அனுப்பினால் போதும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

         இந்தச் சான்றிதழ்களுடன் வாரிசு பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிவிப்பதற்கான 18 பிரிவுகளைக் கொண்ட ஒரு படிவத்தையும் அரசுத் துறைகளின் தலைவரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
   
  பணிவரன்முறை எளிதாகும்: சான்றிதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக கருணை அடிப்படையிலான பணிவரன்முறைகள் எளிதாக நடைபெறும் என பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு

              அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு அரசு / நகராட்சி / நலத்துறை / உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு  பயிலும் மாணவர்களிடம் அடைவுத் தேர்வு நடத்திட முடிவு செய்து ஆணை

இணை பட்டப் படிப்புகள் - தமிழக அரசு ஆணை

பொதுப் பணிகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் இளங்கலை / முதுகலை பட்டப் படிப்புகள் அவற்றுக்கு இணையானதாக கருதப்படும் பட்டப்படிப்புகள் -  தமிழக அரசு ஆணை வெளியீடு.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள்

                    தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

          தேர்வர்கள்  கீழ்கண்ட இணைப்பைச் சுட்டி அதில் தமது தமது தேர்வு எண்ணை கொடுத்து பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.

Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Click here for Provisional Mark List for Paper I 

Monday, November 4, 2013

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்


  அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "-வித்யா" திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  
   புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல் பறக்கும்.மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சில பள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்" அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "-வித்யா" என்றபெயரில் இந்த திட்டம் முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "-வித்யா" செயல்பாட்டுக்கு வருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "-வித்யா" திட்டப் பணிகளில் ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இரு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது
         இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது