Thursday, September 24, 2020

10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான 50% மாணவர்கள் மற்றும் 50% ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி.

 




10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் வீடியோ முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வீடியோ மற்றும் ஆன்லைன் மூலம் எடுக்கக்கூடிய பாடங்களின் தரமானது நேரடியாக வகுப்பில் கற்பதற்கு இணையாக இருக்காது என்று தொடர்ச்சியாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 


அதேவேளையில் மத்திய அரசும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தது. இந்த முறை பல மாநிலங்களில் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதன் வரிசையில் தமிழக அரசும் பொதுத்தேர்வு எழுதக்கூடிய10, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவாக பள்ளிகளுக்குள் அனுமதிக்கலாம் எனவும் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

GO NO : 523 , Date : 24.09.2020 - Download here

Friday, September 4, 2020

மாணவர் சேர்க்கை - EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

           தொடக்கக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20200904_150230

IMG_20200904_150245


புதிய மாணவர் சேர்க்கை :

பிற மாநிலத்திலிருந்து / ஒன்றாம் வகுப்பில் முதன்முறையாக சேர்க்கை ஆகும் மாணவர்களுக்கு புதிய Student Profile உருவாக்கப்பட வேண்டும்.

> பெற்றோர்களால் வழங்கப்பட்ட ஆவணங்கள்

 தகவல்களின் அடிப்படையில் முதற்கட்ட விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும்

கூடுதலாக தேவைப்படும் விவரங்களைப் பின்னர் பெற்று உள்ளீடு செய்தல் வேண்டும்

 ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களின் மாறுதல் சேர்க்கை 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு Promotion செய்தல் வேண்டும் . அதாவது 1 ஆம் வகுப்பு மாணவர்களை 2 ஆம் வகுப்பிற்கும் , 2 ஆம் வகுப்பு மாணவர்களை 3 ஆம் வகுப்பிற்கும் , EMIS இணையதளத்தில் நிலை உயர்த்த வேண்டும்

ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே சேர்க்கை செய்யப்பட்டு பயின்று வரும் மாணவர்களில் யாரேனும் வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச் சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( EMIS இணையதளத்தில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் சார்ந்த தற்போதைய பள்ளியால் மாற்றுச் சான்றிதழ் நிரப்பப்படல் வேண்டும்

 உரிய காரணங்களைக் குறிப்பிட்டு தற்போதைய பள்ளி இம்மாணவர்களின் விவரங்களை Common Pool க்கு மாற்றுதல் வேண்டும்.

 சேர்க்கை மேற்கொள்ளும் புதிய பள்ளியானது இம்மாணவர்களின் விவரங்களை EMIS Id / ஆதார் எண் / கைபேசி எண் ஆகியவற்றினைக் கொண்டு Common Pool லில் இருந்து தேடி எடுத்தல் வேண்டும்.

அவ்வாறு Common Poololdo இருந்து தேடி எடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பள்ளியானது மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மாணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட EMIS Id எண் உருவாக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு , தமிழ்நாட்டிற்குள் மாறுதலில் சேர்க்கையாகும் எந்த மாணவருக்கும் புதிதாக EMIS Id . ஐ எந்த பள்ளியும் உருவாக்கித் தருதல் கூடாது.

       -  தொடக்கக் கல்வி இயக்குநர்.