Sunday, November 30, 2014

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்

          இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

         கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

ஸ்மிருதியுடன் சந்திப்பு:

பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன?

*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.
*நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும். 
பொறுப்பு 

யார் வசம்?

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:


*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி  படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

கல்லூரி மட்ட படிப்பு:


*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.

Saturday, November 29, 2014

பிஎச்.டி. படிப்பு: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

            அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழு நேரம் மற்றும் பகுதி நேர பி.எச்டி. படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வணிகவியல், கல்வியியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிக்கலாம்.

           2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நாடு முழுமையும் திருவள்ளுவர் தினக் கொண்டாட்டம்..........

திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

             திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் உத்திரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இதனை அறிவித்தார். இதற்கான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இந்த பிரச்சினையை எழுப்பி பேசிய தருண் விஜய் இந்தியாவின் பழமையான செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
                   வள்ளுவர் குறளின் சிறப்புகளை வட மாநிலங்களின் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில் அவரது பிறந்த நாளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என தருண் விஜய் கேட்டு கொண்டார்.
வட இந்தியாவை சேர்ந்த தருண் விஜயின் இந்த கோரிக்கையை பாராட்டும் விதமாக மாநிலங்களவையை சேர்ந்த தமிழக எம்.பி.க்களுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பிற மாநில எம்.பி.க்களும் கரஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

Thursday, November 27, 2014

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு - விபரம்

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்

             பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,

*இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,


*ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன் அவர்களையும்,

*மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி - திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வு - அறிவிப்பு

           எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

      தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் மாணவர்களைத் தேர்வு செய்ய டிசம்பர் 27-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தங்களது பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்யுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் இந்த விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிக்குரிய அனைத்து விண்ணப்பங்களையும் டிசம்பர் 5 முதல் 8-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணத்தையும் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Friday, November 21, 2014

2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு

           அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக  அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.
          2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஜனவரி 1 (வியாழன்) ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 4 (ஞாயிறு) மீலாதுநபி
ஜனவரி 15 (வியாழன்) பொங்கல்
ஜனவரி 16 (வெள்ளி) திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 (சனி) உழவர் திருநாள்
ஜனவரி 26 (திங்கள்) குடியரசு தினம்
மார்ச் 21 (சனி) தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல் 1 (புதன்) வங்கிகள் கணக்கு முடிவு
(வணிக-கூட்டுறவு வங்கிகள்)
ஏப்ரல் 2 (வியாழன்) மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 3 (வெள்ளி) புனித வெள்ளி
ஏப்ரல் 14 (செவ்வாய்) தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்
மே 1 (வெள்ளி) மே தினம்
ஜூலை 18 (சனி) ரம்ஜான்
ஆகஸ்ட் 15 (சனி) சுதந்திர தினம்
செப்டம்பர் 5 (சனி) கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 17 (வியாழன்) விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 24 (வியாழன்) பக்ரீத்
அக்டோபர் 2 (வெள்ளி) காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 (புதன்) ஆயுத பூஜை
அக்டோபர் 22 (வியாழன்) விஜயதசமி
அக்டோபர் 23 (வெள்ளி) மொகரம்
நவம்பர் 10 (செவ்வாய்) தீபாவளி
டிசம்பர் 23 (புதன்) மிலாதுநபி
டிசம்பர் 25 (வெள்ளி) கிறிஸ்துமஸ்
 

Thursday, November 20, 2014

தர மதிப்பீடுகள் அவசியமே...........


         மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) என்ற, புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை, ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது, அரசின் முடிவு. இதைக் கருத்தில் கொண்டே, எட்டாம் வகுப்பு வரை, கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு சட்டமாக்கியது.

             உளவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் தேர்வுமுறை பற்றி, பல்வேறு கருத்துகளை வைப்பதும் கவனிக்கத்தக்கது. தேர்வு பயம், தோல்வி பற்றிய அச்சம், மதிப்பெண் குறைவால் பெற்றோரின் நெருக்கடி, வகுப்பாசிரியரின் வசை, சமூகத்தின் ஏளனப் பார்வை இவற்றால், சிறு குழந்தைகள் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகின்றனர் என்பது, அவர்களது வாதம். இன்முகம், மகிழ்ச்சியுடன் கற்றலை எதிர்கொள்ள வேண்டிய சிறார்கள், தேர்வு பயத்தால், கல்வியை வெறுப்பது சரியல்ல என்பதும் ஏற்கக்கூடிய கருத்தே. அதே சமயம், 'தேர்ச்சி, தேர்வு
   அவசியம்' என்பவர்களது வாதம், இதற்கு நேர் மாறானது. தகுதியற்ற மாணவர்கள் பெருக்கம், கல்வித் தரம் தாழ்ந்து போதல், அனைத்துத் துறைகளிலும் திறமையற்றவர்களின் கூட்டம், தேசத்தின் வளர்ச்சியில் தேக்கம், பின்தங்கிய நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்தல் இவற்றை, நம் சந்ததி சந்திக்க வேண்டுமா என்பவர்களது கேள்வியிலும், அர்த்தமில்லாமல் இல்லை. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியால், அடிப்படைக் கல்வித் திறன் இல்லாதவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வருகின்றனர். வகுப்பு மாற்றங்களுக்குத் தேர்வு அவசியம். குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பீடு முதல் வகுப்பிலிருந்து இருக்கட்டும் என்பது, சில கல்வியாளர்களது வாதம். நாம், காய்கறிகளைக் கூட, தரம் பார்த்தே வாங்குகிறோம். அரசின் தவறான கல்விக் கொள்கைகளால், தேசத்தின் கல்வித் தரம் தாழ்வது நல்லதல்ல. கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே, தொடர் தேர்ச்சி மதிப்பீடு முறையில், வகுப்பு மாற்றங்கள் இருக்கட்டும். தேர்வு பயமின்றி, கற்பதில் ஆரோக்கிய மூட்டும் கல்வி முறை, பாடத் திட்டங்களில் மாற்றம் தேவையான சீர்திருத்தங்கள் கல்வி முறையில் தேவை. தொடக்கக் கல்வியில், தற்போதுள்ள பாடச் சுமைகள் தேவையற்றவை. செயல்வழிக் கற்றல், ஆடல் பாடல்களுடன் கற்றல் என்ற தற்போதுள்ள கற்பித்தல் முறையால் மொழியாளுமை, நினைவாற்றல் குறைவது நல்லதல்ல. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கல்வி முறை, திறன்களை வளர்க்காது.

அகஇ - "பயிற்சிகளின் தாக்கம்" சார்பான பயிற்சி கட்டகம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் ஊதிய உயர்வு..........

பள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

Tuesday, November 11, 2014

ஏழாவது ஊதியக்குழு - முக்கிய எதிர்பார்ப்புகள்

7 TH PAY COMMISSION HIGHLIGHTS

1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.

2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

3. Scrap New Pension Scheme and cover all employees under Old Pension and Family Pension Scheme.

4. JCM has proposed minimum wage for MTS (Skilled) Rs.26,000 p.m.

5. Ratio of minimum and maximum wage should be 1:8.

6. General formula for determination of pay scale based on minimum living wage demanded for MTS is pay in PB+GP x 3.7.

7. Annual rate of increment @ 5% of the pay.

8. Fixation of pay on promotion = 2 increments and difference of pay between present and promotional posts (minimum Rs.3000).

9. The pay structure demanded is as under:-

               Exiting                       Proposed (in Rs.)

PB-1, GP Rs.1800      26,000

PB-1, GP Rs.1900]
PB-1, GP Rs.2000]     33, 000

PB-1, GP Rs. 2400]
PB-1, GP Rs.2800]      46,000

PB-2, GP Rs.4200       56,000

PB-2, GP Rs.4600]
PB-2, GP Rs.4800]      74,000

PB-2, GP Rs.5400       78,000

10. Dearness Allowances on the basis of 12 monthly average of CPI, Payment on 1st Jan and 1st July every year.

11. Overtime Allowances on the basis of total Pay+DA+Full TA.

12 Liabilities of all Government dues of persons died in harness be waived.

13. Transfer Policy – Group `C and `D Staff should not be transferred. DoPT should issue clear cut guideline as per 5th CPC recommendation. Govt. should from a Transfer Policy in each department for transferring on mutual basis on promotion. Any order issued in violation of policy framed be cancelled by head of department on representation.

14. Transport Allowance -

X Class Cities Y Class Cities

Pay up to Rs.75,000 Rs.7500 + DA Rs.3750 + DA

Pay above Rs.75,000 Rs.6500 + DA Rs.3500 + DA

13. Deputation Allowance double the rates and should be paid 10% of the pay at same station and 20% of the pay at outside station.

14. Classification of the post should be executive and non-executive instead of present Group A,B.C.

15. Special Pay which was replaced with SPL/Allowance by 4th CPC be bring back to curtail pay scales.

16. Scrap downsizing, outsourcing and contracting of govt. jobs.

17. Regularize all casual labour and count their entire service after first two year, as a regular service for pension and all other benefits. They should not be thrown out by engaging contractors workers.

18. The present MACPs Scheme be replaced by giving five promotion after completion of 8,15,21,26 and 30 year of service with benefits of stepping up of pay with junior.

19. PLB being bilateral agreement, it should be out of 7th CPC perview.

20. Housing facility:-

(a) To achieve 70% houses in Delhi and 40% in all other towns to take lease accommodation and allot to the govt. employees.

(b) Land and building acquired by it department may be used for constructing houses for govt. employees.

21. House Building Allowance :-

(a) Simplify the procedure of HBA
(b) Entitle to purchase second and used houses

22. Common Category – Equal Pay for similar nature of work be provided.

23. CP appointment – remove ceiling of 5% and give appointment within Three months.

24. Traveling Allowance:-
‘A1’ and ‘A’ Class Cities Other Cities

A. Executives Rs.5000+DA per day Rs.3500+DA per day
B. Non-Executives Rs.4000+DA per day Rs.2500+DA per day

25. Composite Transfer Grant :-

Executive Class 6000 kg by Goods Train/ Rate per km by road 8 Wheeler Wagon Rs.50+DA(Rs.1 per kg and single container per km)

Non-Executive Class 3000 kg – do – -do-

26. Children Education Allowance should be allowed up to Graduate, Post Graduate, and all Professional Courses. Allow any two children for Children Education Allowance.

27. Fixation of pay on promotion – two increments in feeder grade with minimum benefit of Rs.3000.

28. House Rent Allowance

X Class Cities  60%
Other Classified Cities  40%
Unclassified Locations  20%

29. City Allowance

`X’ Class Cities `Y’ Class Cities
A. Pay up to Rs.50,000 – 10%  , 5%
B. Pay above Rs.50,000 6% minimum Rs 5000 3% minimum Rs.2500

30. Patient Care Allowance to all para-medical and staff working in hospitals.

31. All allowances to be increased by three times.

32. NE Region benefits – Payment of Special Duty Allowance @ 37.5 of pay.

33. Training:- Sufficient budget for in-service training.

34. Leave Entitlement

(i) Increase Casual Leave 08 to 12 days & 10 days to 15 days.
(ii) Declare May Day as National Holiday

(iii) In case of Hospital Leave, remove the ceiling of maximum 24 months leave and 120 days full payment and remaining half payment.

(iv) Allow accumulation of 400 days Earned Leave

(v) Allow encashment of 50% leave while in service at the credit after 20 years Qualifying Service.

(vi) National Holiday Allowance (NHA) – Minimum one day salary and eligibility criteria to be removed for all Non Executive Staff.

(vii) Permit encashment of Half Pay Leave.

(viii) Increase Maternity Leave to 240 days to female employees & increase 30 days Paternity Leave to male employees.

35. LTC

(a) Permission to travel by air within and outside the NE Region.
(b) To increase the periodicity once in a two year.
(c) One visit outside country in a lifetime

36. Income Tax:

(i) Allow 30% standard deduction to salaried employees.
(ii) Exempt all allowances.
(iii) Raise the ceiling limit as under:
(a) General – 2 Lakh to 5 Lakh
(b) Sr. Citizen – 2.5 Lakh to 7 Lakh
(c) Sr. Citizen above 80 years of age – 5 Lakh to 10 Lakh
(iv) No Income Tax on pension and family pension and Dearness Relief.

35. (a) Effective grievance handling machinery for all non-executive staff.

(b) Spot settlement
(c) Maintain schedule of three meetings in a year
(d) Department Council be revived at all levels
(e) Arbitration Award be implemented within six month, if not be discussed with Staff Side before rejection for finding out some modified form of agreement.

36. Appoint Arbitrator for shorting all pending anomalies of the 6th CPC.

37. Date of Increment – 1st January and 1st July every year. In case of employees retiring on 31st December and 30th June, they should be given one increment on last day of service, i.e. 31st December and 30th June, and their retirements benefits should be calculated by adding the same.

38. General Insurance: Active Insurance Scheme covering risk upto Rs. 7,50,000/- to Non Executive & Rs. 3,50,000/- to Skilled staff by monthly contribution of Rs. 750/- & Rs. 350/- respectively.

39. Point to point fixation of pay.

40. Extra benefits to Women employees

 (i) 30% reservation for women.
(ii) Posting of husband and wife at same station.
(iii) One month special rest for chronic disease
(iv) Conversion of Child Care Leave into Family Care Leave
(v) Flexi time

41. Gratuity:

Existing ceiling of 16 ½ months be removed and Gratuity be paid @ half month salary for every year of qualifying service.
Remove ceiling limit of Rs.10 Lakh for Gratuity.

42. Pension:

(i) Pension @ 67% of Last Pay Drawn (LPD) instead of 50% presently.
(ii) Pension after 10 years of qualifying service in case of resignation.
(iii) Increase pension age-based as under:
65 years – 70% of LPD
70 years – 75% of LPD
75 years – 80% of LPD
80 years – 85% of LPD
85 years – 90% of LPD
90 years – 100% of LPD
(iv) Parity of pension to retirees before 1.1.2006.
(v) Enhanced family pension should be same in case of death in harness and normal death.
(vi) After 10 years, family pension should be 50% of LPD.
(vii) Family pension to son upto the age of 28 years looking to the recruitment age.
(viii) Fixed Medical Allowance (FMA) @ Rs.2500/- per month.
(ix) Extend medical &facilities to parents also.
(x) HRA to pensioners.
(xi) Improvement in ex-gratia pension to CPF/SRPF retirees up to 1/3rd of full pension.

Monday, November 10, 2014

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது


         அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது.

        அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.


          அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

           இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

   அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். ‘பாஸ்’ செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். ‘ஃபெயில்’ ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற ‘பாஸ்’ மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த மாற்றம்?

               கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது

TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

          TNTET: சுப்ரீம் கோர்ட்டில் GO.71 மற்றும் GO.25 எதிரான வழக்குகளில் முகாந்திரம் உள்ளதாகக் கருதி ஏற்றுக்கொண்டு, அதற்கு அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும். சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.


Supreme court case appeared. Lawyer msg.

Full details:

              SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

Thursday, November 6, 2014

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியை பிற மாநிலங்களில் வழங்க தடை

            தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் தொலைதூர கல்வியை வழங்க யுஜிசி தடைவிதித்துள்ளது. தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தொலைதூர கல்வி திட்டத்தில், வீட்டில் இருந்து கொண்டோ அல்லது வேலை பார்த்து கொண்டோ படிக்கலாம். இந்த கல்வியை தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள 10 பல்கலைக்கழகங்களும், சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் தொலைதூர கல்வி மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானிய குழு, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே தொலைதூர கல்வியினை வழங்க வேண்டும்.
        பிற இடங்களில் தொலைதூர கல்வி மையங்களை தொடங்கக் கூடாது என்று கூறி ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்த கடிதம் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்விதுறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் யுஜிசிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பல்கலைக்கழகத்திற்கு தொலைதூர கல்வியினால் கிடைத்து வரும் வருவாய் தடைபடும். பல்கலைக்கு வருமான இழப்பீடும் ஏற்படும். எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் தொலைதூர கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்கலாம்.
             மாநிலத்தின் மற்ற பகுதியில் தொலைதூர கல்வி வழங்க தமிழக அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழக பல்கலைக்கழகங்கள் வேறு மாநிலங்களில் தொலைதூர கல்வி வழங்க கூடாது. அதேபோல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தொலைதூர கல்வியை வழங்க வேண்டும். அதேபோல, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அனுமதியில்லாமல் தொலைதூர கல்வியை ஆரம்பித்தால் அவை ரத்து செய்யப்படும். எங்கள் கடிதம் கிடைத்த பிறகு, வெளிமாநிலங்களில் தொலைதூர கல்விநிலையம் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட கூடாது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு பிறகு மாணவர்களை சேர்த்து அவர்களை படிக்க வைத்தால் அந்த மாணவர்கள் பெறும் பட்டம் தகுதியற்றதாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலை மையம்
       சென்னை பல்கலைக்கழகத் துக்கு தமிழகத்தில் 40 மையங்களும், வெளிமாநிலத்தில் 50 மையங்களும், வெளிநாட்டில் 4 மையமும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 22 இளங்கலை படிப்புகள், 14 முதுகலை படிப்புகள், 9 முதுகலை அறிவியல் படிப்புகள், 16 டிப்ளமோ படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு......

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிக்கை (Notification) இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

     விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.
      விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.
தேர்வு நடைபெறும் நாள்: 10.1.2015
      ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-
தமிழ் - 277
ஆங்கிலம் - 209
கணிதம் - 222
இயற்பியல் - 189
வேதியியல் - 189

தாவரவியல் - 95
விலங்கியல் - 89
பொருளியல் - 177
வணிகவியல் - 135
உடற்கல்வி இயக்குநர் - 27
வரலாறு - 198

Wednesday, November 5, 2014

ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு
    1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

     இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன.
   இதில் தங்கள் கருத்துருக்களை திரும்பப் பெற்றவர்களும், இனி அனுப்பும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் துறை அலுவலர்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணை எண், பணிப் பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்துக்கான முகாந்திரம், அரசு ஆணை எண். 363-ன்படி திருத்திய ஓய்வூதியத்துக்கு பணிப் பதிவேடு கிடைக்கவில்லை எனில், 4-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட அட்டவணை, ஓய்வூதியதாரரின் விருப்பப் படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் சார் கருவூலத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும்..
         மேலும் விவரங்களுக்கு "துணை மாநில கணக்காயர் (ஓய்வூதியம்), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 18' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் -5 மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோரி டிசம்பர் -5 ம் தேதி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

To observe “NATIONAL PROTEST DAY” ON 5th  December, 2014 All Over India along with all Central Trade Unions in India
------ooo-----
New Delhi, Nagpur,Mumbai,Ranchi, Bangalore, Cochin; 24/10/2014;

Central Government Employees Confederation (CGEC); National Organisation of Central Government Employees (NOCGE) and INTUC have unanimously resolved to observe “ NATIONAL PROTEST DAY” on 5th  December, 2014 all over India along with all Central Trade Unions in India (Viz: INTUC, BMS, CITU, HMS, AITUC, TUCC, AIUTUC, AICCTU, UTUC,SEWA, LPF and all Federations of Banks, Railways (NFIR & AIRF), Defence (INDWF & AIDEF), Insurance, Central/State Govt. and other Service Establishments Employees).


Demands
========

1. Central Govt. should desist from its unilateral move to amend Labour Laws and consult and honour the views of Central Trade Unions.


2. Central Govt. should withdraw the retrograde move in allowing/hiking Foreign Direct Investment (F.D.I.) in Defence Sector, Railways, Insurance, PSUs and other Sectors.

3. Restore minimum wages of Rs.15,000/- to all the Unorganised/Contract Workers and Minimum Wages of Rs.26,000/- to the lower paid employees of Central Government.

4. Demands of Bank Officers and Bank Employees should be immediately accepted in respect of their Wage Revision and other privileges and social security measures, which are over due (Go through the Circulars dated 14/10/2014 & 16/10/2014 issued by the UFBU, AIBOBOA, INBOC, INBEC and INBEF etc.)

5. Strict implementation of existing Labour Laws concerning the Welfare of the Working Class all over India.

6.Benefits of Regular Workers should be given to all Contract Workers.
7. Compulsory Registration of Trade Unions within 45 days and all the ILO Conventions meant for the Workers should be ratified by the Govt. Of India.

8. 50% D.A. of Central Staff should be merged with Pay and Interim Relief should be paid to all employees, pending finalisation of the 7th Central Pay Commission.

9. Minimum 4 Promotions should be given to all Central Govt. Officials, without the hindrances of Departmental Examinations and DPC proceedings, on or before their respective date of retirements.2

10. MACP/ACP benefits should be extended to all Central Government Employees, including the staff of Autonomous Body/Semi-Govt. Departments.

11. Bonus eligibility and Bonus Ceiling should be raised as per the present Price Index Cost of Living and Updated Model of Pay Structure.

12. Present quantum of Pension should be raised with adequate Medical facilities/Medical Allowance and the New Pension Scheme should be liberalised as Worker-Friendly.

Accordingly, all the Unions, Associations and their Federations are requested to observe  “NATIONAL PROTEST DAY” on 5th  December, 2014 by way of Mass Demonstrations and Mass Protest Meetiungs & Rallies all over India and give wide publicity through Newspapers, T.V.

Channels and AIR/Doordarshan etc. Concerned Office-bearers are requested to send a report after observing the above programme of action to the undersigned on or before 15/12/2014.