Thursday, June 30, 2022

2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

      அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.தஞ்சாவூா் அருகே வல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

         தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் பழைய முறையில் இருந்தபடி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இதற்கான சிறப்பாசிரியா்களை நியமிப்பதற்கான தோ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   பள்ளிகளில் இப்போது பொதுவாக முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிா்த்து வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. இப்போது இருக்கிற கட்டுப்பாடுகள் இருந்தால் போதுமானது. பள்ளிகளில் 12 வயதுக்கும் அதிகமான மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

        கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகள் கழித்து புதிதாகப் பள்ளிகளைத் திறக்கும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டிலிருந்துதான் முழுமையாக பள்ளிக்கூடங்களைத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வகுப்புகளும், நவம்பரில் சில வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளும் வந்து சோ்வதற்குள் மீண்டும் ஜனவரி மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் எப்போதும்போல வகுப்புகள் நடைபெறுவதால், பாடங்கள், தோ்வுகள் முழுமையாக நடத்தப்படும். எனவே, இனிமேல் தோ்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. இதற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதையும் மீறி 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனா். இந்த மாதிரியான மனநிலையில் யாரும் இருக்க வேண்டாம் என்றாா் அமைச்சா்.

LKG,UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.....

         2381 அரசு பள்ளிகளில் செயல்படும்  LKG,UKG வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்தும் மாணவர்களை பராமரிக்க வேண்டியது குறித்தும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் வழிகாட்டுதல்....





Wednesday, June 29, 2022

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு....

 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.......


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைப்பெற்றது . உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 09.072022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் , பள்ளிமேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த கூட்டம் பார்வையில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜுலை 4 ம் தேதிக்குள் விளக்கக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் உட்பட கீழ்காணும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம்

05.07.2022 , 06.07.2022 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!







குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! ( 29.06.2022 )

 

செய்தி வெளியீடு எண் : 1062 
நாள் : 29.06.2022

 ” குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் ”

 நாம் பிறந்த நொடியிலிருந்து இறுதிநொடி வரை கற்றுக்கொண்டே இருக்கிறோம் . நமது உலகைப் பற்றியும் சுற்றுச்சூழலைப் பற்றியும் நமது புலன்கள் வாயிலாகவே அறிந்துகொள்கின்றோம் . குழந்தைகளும் சிறுவர்களும் தங்கள் புலன்கள் வாயிலாகவேஉலகைப் புரிந்துகொள்கிறார்கள்.
இதிலிருந்தே அவர்களின் கற்றல் பயணம் தொடங்குகிறது. அழுதால் உணவு கிடைக்கும் , உதவி செய்தால் கைதட்டல் என்ற பாராட்டு கிடைக்கும் என தனது ஒவ்வொரு செயலுக்கும் பெறக்கூடிய எதிர்வினைகளில் இருந்து குழந்தை கற்றுக்கொள்கிறது.
 குழந்தைகளுக்கு புரியவைக்கவென்று ஒரு மொழி இருக்கிறது . அது மிக மிக எளிமையானது. இந்த எளிமை கைவரவில்லை எனில் குழந்தைக்கு நாம் சொல்வது புரியாமல் போய்விடும் . ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இயல்பிலேயே ஆர்வமுள்ள குழந்தைகள் விருப்பமுடன் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் கற்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை . சரியான தகுந்த கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தினால் போதும் எனவே குழந்தைகளுக்குள் ஆர்வம் என்னும் தீயைத் தூண்டிவிடுவதே நம் வேலையாக அமைய வேண்டும்.

 கேள்வி கேட்பதற்கும் ஆராய்ந்து பார்ப்பதற்கும் வாய்ப்பையும் சூழலையும் வழங்க வேண்டும் . குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் கற்றுக்கொள்ளும் முறை மாறுபடுகிறது. அதற்கேற்ப கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் குழந்தைகள் , தங்களைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியும் பெரியவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே செய்வதன்மூலமும் கற்றுக்கொள்கிறார்கள்.
 முதல் சில ஆண்டுகளில் தன்னைச் சுற்றி உள்ளவற்றை நடப்பவற்றை உற்று நோக்குவதன் vayilagave குழந்தை கற்றுக்கொள்கிறது . இயல்பாகவே குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் எதையாவது செய்து கொண்டும் இருப்பவர்கள் நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை மணிக்கணக்கில் ஒரு மேசையில் அமர்ந்து ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல.
 இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு குழந்தையும் செய்து பார்த்து உணர்ந்து கற்பதற்கு ஏற்றவகையில் வகுப்பறை செயல்பாடுகளால் நிறைந்திருக்க வேண்டும் . 0-8 என்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கான முக்கியமான காலக்கட்டம். இக்காலக்கட்டத்தில் குழந்தைகள் , விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் . மற்ற பருவங்களைவிட இப்பருவத்தில் அவர்களின் உள்வாங்கும் தன்மை சிறப்பாக இருக்கும் . குழந்தைகளுக்கு விளையாட்டு அல்லது செயல்பாடுகளே கற்றுக்கொள்ள உதவும் இதனடிப்படையில் கற்பித்தல் முறை அமையவேண்டும் . குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த நாள்முதல் ஏழு ஆண்டுகள் வரை குழந்தைகள் உணர்ந்து அனுபவித்து அறியும் " அனுபவ கற்றல் " நடைபெறுகிறது.
பாடல்கள் , கதைகள் , களப்பயணங்கள் , கலைகள் கவிதைகள் , உடலியக்கங்கள் , செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல் , அவர்கள் கற்றுக்கொண்டதை நெடுங்காலம் நினைவகத்தில் தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். 

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கற்றுக் கொள்கிறது . ஒரு குழந்தை கேட்பதாலும் , வேறொரு குழந்தை பார்ப்பதாலும் இன்னொரு குழந்தை தொட்டுணர்வதாலும் எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

எனவே கற்பித்தலும் இப்படி அனைத்து விதத்திலும் இருக்கவேண்டிய தேவையுள்ளது . சுதந்திரமாக , மகிழ்ச்சியாக , அனுபவங்களின்வழி கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சிறப்பான கற்றல் திறனுடையவர்களாக ஆகிறார்கள் இதற்கேற்ப விளையாட்டுவழி செயல்வழி , தொட்டுணர் செயல்பாடுக கள் , பாடங்கள் கற்றுத் தரப்பட வேண்டும் . " நீங்கள் கற்பிக்கும் முறை வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் , குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் கற்பிக்க வேண்டும். " என்றார் இக்னேசியா எக்ஸ்ட்ரடா இதனடிப்படையிலேயே கற்பித்தல் நிகழவேண்டும். அழுத்தமோ பயமோ இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் கற்றுக்கொண்டால்தான் குழந்தைக்கு எளிதில் பாடங்கள் புரியும். மன நமது கல்விமுறை முழுமையும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் . அதாவது . போட்டியின் அடிப்படையில் அல்லாமல் , குழந்தைகளின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் , அனுபவித்துக் கற்றுக்கொள்வதாக மாற வேண்டும். கற்றுக்கொண்டவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் வகையில் கல்வியின் குறிக்கோள் அமையவேண்டும். எனவே , குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை , ஆற்றலை உணரும் வகையில் பேசுதல் , செயல்பாடுகள் , கலை , கைவினைச் செயல்பாடுகள் , எழுதுதல் , வெளிப்பாடு போன்றவற்றின் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை பாடல் , கதை , வாசித்தல் , பொம்மலாட்டம் , படைப்பு மற்றும் பல செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கற்பித்தல் முறை தேவையாய் இருக்கிறது

 கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது . 2020 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தை 2021 இல் இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே 2022 ஆம் ஆண்டிற்குள் நுழைகிறது . நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வருகையில் இந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை பள்ளி வகுப்பறையில் செய்ய வேண்டி இருக்கிறது. இணையவழி வகுப்புகள் நடந்திருந்தாலும் , இணையம் மெதுவாக வேலை செய்யும் கிராமங்களில் பாடங்களை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தன : போலவே , ஸ்மார்ட் போன்கள் இல்லாத குடும்பங்களும் உண்டு . அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மற்ற குழந்தைகளுடையதைவிட அதிகம் , இந்தத் தேவையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டில் 1-3 வகுப்புகளுக்கான ' எண்ணும் எழுத்தும் ' திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது.

வரும் 2022-23 கல்வியாண்டில் தொடங்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025 ல் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பது அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் . செயல்வழியிலும் விளையாட்டுவழியிலும் குழந்தைகள் கற்றாலும் , அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் அடிப்படை குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்கவும் ' எண்ணும் எழுத்தும் ' உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் ‘ எண்ணும் எழுத்தும் ' தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்.

1. " கற்றல் என்பது அனுபவம் . மற்றவை அனைத்தும் வெறும் தகவல்களே " -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் , 
2 . " ஆப்பிள்கள் கீழே விழுவதைக் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருந்தனர் . ஆனால் நியூட்டன் மட்டுமே அதைக்கண்டு கேள்வி எழுப்பினார் ” பெர்னார்ட் பாரூச்

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9







Monday, June 27, 2022

Saturday, June 25, 2022

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு......

              




              2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் குறித்து கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

           “ ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ .1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 


        மாணவர்களின் நுண்ணறிவுத் திறன் , செயல்பாட்டுத் திறன் , ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட , மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும் , சென்னையில் வரும் ஜீலை , ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மேற்காண் அறிவிப்பு குறித்து மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி ஆணையரின் பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மாத இதழ் - அரசாணை வெளியீடு.

             தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு!





SGT / BT ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு...




 தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் SGT / BT ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

Tuesday, June 21, 2022

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜுன் 22 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

www.tngasa.in 

 www / tngasa.org 

என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவுசெய்ய ஜூலை 7 ம் தேதி இறுதிநாள் ஆகும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறு கட்டமைப்பு கூட்ட தேதியில் மாற்றம்.......

02.07.2022க்குப் பதிலாக  09.07.2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்......



ரூ.1000 கல்வி உதவித் தொகை - சான்றிதழ் பெற உத்தரவு.


மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள், 

வங்கிக்கணக்கு எண் 

உள்ளிட்டவற்றை பெற கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவு.