Tuesday, December 30, 2014

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

          'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடிதம்:

         அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், மாணவர்கள் குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

* கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில், 2012 - 13ம் கல்வியாண்டில் இருந்து, பள்ளிகள் விவரங்கள் அடிப்படையில், தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதை சரிபார்த்து, நடப்பு கல்வியாண்டிற்கு, புதிய பள்ளிகள், விடுபட்ட பள்ளிகள் விவரங்களை பதிய வேண்டும்.


* 2014 - 15ல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தலைமை ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவுடன், விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆய்வு அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.


* ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை, ஆதார் எண்களை பெற்று, கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில் பதிவு செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.


* ஒவ்வொரு பள்ளியிலும், ஆதார் எண் பெற்ற, பெறாத மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை, ஆய்வு அலுவலர்கள் பெற்று, தகவல் மேலாண்மை முறை மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

சிறப்பு முகாம்

* அதிகளவில் ஆதார் எண் பெறாத பகுதிகளை, மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்டறிந்து, அந்த பகுதி அல்லது மண்டலங்களில், மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.


* மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, எடை உயரம் ஆகிய விவரங்களை பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது - தேர்வுக் குழு அமைத்தல்....

       2014-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துகளை அனுப்புதல் மற்றும் மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல்





Sunday, December 28, 2014

பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.....

  எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014 அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DGE - NMMS EXAMINATION POSTPONED TO 24.01.2015 REG LETTER CLICK HERE... 

Tuesday, December 23, 2014

திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி

      திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான விளக்கங்களையும் உரைநடையாக எழுதி அனுப்ப வேண்டும். அதேபோல, ஓவியம் வரைபவர்கள், ஒரு வெள்ளை காகிதத்தில் திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை வரைந்து அனுப்ப வேண்டும்.


       படைப்புகளை ஜனவரி 5-ஆம் தேதிக்குள், "நுகர்வோர் மனித உரிமைகள் கண்காணிப்பகம், எண்-10, 9-ஆவது தெரு, காமராஜர் குடியிருப்பு, கோடம்பாக்கம், சென்னை-24' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு:9445139779.

Saturday, December 20, 2014

புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல்.....

புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல் சார்பு-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

     

Thursday, December 18, 2014

பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு

பணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலாளர் திருமதி.சபிதா உத்தரவு - அரசானை வெளியீடு


துறைத் தேர்வுகள் - நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது........

Wednesday, December 17, 2014

அரசு பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை


         தமிழகத்தில், அரசு பள்ளிகளை, ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.


    புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.

     இதுதொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன.

  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.

  இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், "தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.

Monday, December 15, 2014

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ. .....


        தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.


            இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

          உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

            இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.

    இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

          புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

      ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

        பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

        பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

          மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

        இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Sunday, December 14, 2014

885 ஆசிரியப் பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல் .....

        ஆசிரியப் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் அவர்கள் தொடுத்த வழக்கில் 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்




Friday, December 12, 2014

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது.

     பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


         இந்த அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளன.

துறைத் தேர்வு டிசம்பர் 2014 - கால அட்டவண

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : மார்ச் 7-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்


            தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்-அமைச்சர் ஆணையின்படி, ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும் 2013 ஆகிய
     ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு அதாவது 7.3.2015-க்குள் tnvelaivaaippu.gov.in ஆன்-லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

          ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

Thursday, December 11, 2014

கடிதம் எழுதும் போட்டி..............

             இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டிக்கு, டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சார்பில்,

44-ஆவது உலக அஞ்சல் ஒன்றியத்தின் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.

ரொக்கப் பரிசுகள் தவிர்த்து, தேசியளவில் சிறந்த கடிதமாக தேர்வு பெறும் முதல் மூன்று தேர்வாளர்களுக்கு உலக அஞ்சல் ஒன்றியம் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் அஞ்சல் தலைகள் அடங்கிய ஆல்பம், சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும்.

சென்னையில் மேற்கு மாம்பலம், ஜூப்ளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 4-ஆம் தேதி, காலை 10-11 மணி வரை போட்டி நடைபெறும்.

போதுமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருப்பின் பள்ளிகள் தங்கள் சொந்த வளாகத்தில், திட்டமிட்ட தேதி, நேரத்தில் கடிதம் எழுதும் போட்டியை நடத்தலாம்.

"நீங்கள் வளர விரும்பும் உலகம் பற்றி சொல்லுங்கள்" என்ற தலைப்பில் ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட மொழியில் விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும்.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22-ஆம் தேதி கடைசி நாளாகும். மதுரை, கோவை, திருச்சி ஆகிய மையங்களிலும் போட்டி நடைபெறும்.

ஜி.க.பொன்னுரங்கம், உதவி இயக்குநர் (அஞ்சல்,அமைப்பு), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை-600002 என்ற முகவரியிலும், pmgccrtca@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 044-28580048,28520430, 28551774 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த நகரங்களில் உள்ள அஞ்சல் துறைத் தலைவர்களையும் அணுகலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 10, 2014

வாழ்த்துக்கள்.........


          தமிழக ஆசிரியர் கூட்டணி உளுந்தூர்பேட்டை கிளை தனது வட்டார விழாவிற்காக பலவண்ணத்தில் எட்டு பக்க அளவில் அழகான அழைப்பிதழை அச்சிட்டு உள்ளனர் வாழ்த்துக்கள்.........





தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாதவர்கள் ஊதியம் பெறுதல் சார்பான அரசுக் கடிதம்........




Monday, December 8, 2014

உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" பயிற்சி

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் - பட்டியல் வெளியீடு

Thursday, December 4, 2014

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

          பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
         புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மதிப்புமிகு. வி.சி. இராமேஸ்வர முருகன் அவர்களை மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய பதவியில் இன்று பொறுப்பேற்பார்கள் என்று தெரிகிறது.

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

     சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

     தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக் கல்வித் துறை உத்திரவு

       அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக் கல்வித் துறையில் உள்ள இலட்சக் கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி முன் அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப் பணம் கோரல், சேமநல நிதி கணக்கீடு, ஊக்க ஊதியம் அனுமதித்தல், பதவி உயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம், பண்டிகை முன்பணம், மருத்துவ விடுப்பு அனுமதித்தல், ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல், போன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித் தொடக்கக்கல்வி அலுவலகப் பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலக குறிப்புகளும், ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழி முறையிணை பின்பற்ற தொடக்கக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள், அலுவலக நடைமுறைக் கடிதம், அலுவலக செயல்முறை ஆணைகள் மற்றும், பணிப் பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப் பயிற்சியின் போது வழங்கப்பட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக் கல்வி அதிகாரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

Wednesday, December 3, 2014

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் செயலாளர் சபீதா தகவல்


        தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.
             பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
        இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

Tuesday, December 2, 2014

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

சமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.