Tuesday, September 26, 2023

தமிழக ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் முப்பெரும் விழா......

தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில் முப்பெரும் விழா 23.09.2023ல் ஒசூரில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு கூட்டரங்கில் நடைபெற்றது. ஆசிரியர் தினவிழா, பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டுவிழா, தலைமைப் பண்பு கருத்தரங்கம் ஆகியவை இணைந்த முப்பெருவிழாவாக நடைபெற்ற இவ்விழாவிற்கு ஒசூர் கல்வி மாவட்டத் தலைவராக இருந்த வெ. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். டி. ஜான்சங்கர் முன்னிலை வகித்தார். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார். என்.லோகேஷ், செ. இராஜேந்திரன், தூ. மனுநீதி, இரா. இராஜேஸ் எபிநேசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் திருமிகு மா. நம்பிராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் திருமிகு அ. வின்செண்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் திருமிகு க.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகு அண்ணன் வா. அண்ணாமலை அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு செய்தும், இயக்கப் பொருப்பாளர்களுக்கு தலைமைப் பண்பு கருத்தரங்க உரை நிகழ்த்தியும், ஆசிரியர் தின பேருரை ஆற்றினார். அப்போது அவர் இன்றைய சவாலான காலகட்டத்தில் ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், ஆசிரியர்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி எமிஸ் என்னும் அரக்கனின் பிடியில் இருந்து விடுதலை பெறும் நாளே ஆசிரியர்களுக்கான பொற்காலம் என்றும் கூறி முடித்தார். இறுதியில் இசக்கிஞானம் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.