Friday, October 9, 2020

மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.....

 ======  மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பரிசீலனை செய்யப்படும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் (2020-2021 ஆம் ஆண்டு ) எண்ணிக்கை : 50 

=====மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிட மாறுதலுக்கு பரிசீலனை செய்யப்படும்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்கள்‌ (2020-2021 ஆம்‌ ஆண்டு) எண்ணிக்கை : 45 

=====DEO PROMOTION PANEL 2020 | DOWNLOAD

Thursday, September 24, 2020

10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான 50% மாணவர்கள் மற்றும் 50% ஆசிரியர்களுடன் அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி அரசு அனுமதி.

 




10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் வீடியோ முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வீடியோ மற்றும் ஆன்லைன் மூலம் எடுக்கக்கூடிய பாடங்களின் தரமானது நேரடியாக வகுப்பில் கற்பதற்கு இணையாக இருக்காது என்று தொடர்ச்சியாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 


அதேவேளையில் மத்திய அரசும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தது. இந்த முறை பல மாநிலங்களில் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதன் வரிசையில் தமிழக அரசும் பொதுத்தேர்வு எழுதக்கூடிய10, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவாக பள்ளிகளுக்குள் அனுமதிக்கலாம் எனவும் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

GO NO : 523 , Date : 24.09.2020 - Download here

Friday, September 4, 2020

மாணவர் சேர்க்கை - EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

           தொடக்கக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20200904_150230

IMG_20200904_150245


புதிய மாணவர் சேர்க்கை :

பிற மாநிலத்திலிருந்து / ஒன்றாம் வகுப்பில் முதன்முறையாக சேர்க்கை ஆகும் மாணவர்களுக்கு புதிய Student Profile உருவாக்கப்பட வேண்டும்.

> பெற்றோர்களால் வழங்கப்பட்ட ஆவணங்கள்

 தகவல்களின் அடிப்படையில் முதற்கட்ட விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும்

கூடுதலாக தேவைப்படும் விவரங்களைப் பின்னர் பெற்று உள்ளீடு செய்தல் வேண்டும்

 ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களின் மாறுதல் சேர்க்கை 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு Promotion செய்தல் வேண்டும் . அதாவது 1 ஆம் வகுப்பு மாணவர்களை 2 ஆம் வகுப்பிற்கும் , 2 ஆம் வகுப்பு மாணவர்களை 3 ஆம் வகுப்பிற்கும் , EMIS இணையதளத்தில் நிலை உயர்த்த வேண்டும்

ஏதேனும் ஒரு பள்ளியில் ஏற்கனவே சேர்க்கை செய்யப்பட்டு பயின்று வரும் மாணவர்களில் யாரேனும் வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச் சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை ( EMIS இணையதளத்தில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் சார்ந்த தற்போதைய பள்ளியால் மாற்றுச் சான்றிதழ் நிரப்பப்படல் வேண்டும்

 உரிய காரணங்களைக் குறிப்பிட்டு தற்போதைய பள்ளி இம்மாணவர்களின் விவரங்களை Common Pool க்கு மாற்றுதல் வேண்டும்.

 சேர்க்கை மேற்கொள்ளும் புதிய பள்ளியானது இம்மாணவர்களின் விவரங்களை EMIS Id / ஆதார் எண் / கைபேசி எண் ஆகியவற்றினைக் கொண்டு Common Pool லில் இருந்து தேடி எடுத்தல் வேண்டும்.

அவ்வாறு Common Poololdo இருந்து தேடி எடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பள்ளியானது மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மாணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட EMIS Id எண் உருவாக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு , தமிழ்நாட்டிற்குள் மாறுதலில் சேர்க்கையாகும் எந்த மாணவருக்கும் புதிதாக EMIS Id . ஐ எந்த பள்ளியும் உருவாக்கித் தருதல் கூடாது.

       -  தொடக்கக் கல்வி இயக்குநர்.

Saturday, August 8, 2020

தொடக்கக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


            நமது இந்திய திருநாட்டின் 74 - வது சுதந்திர தின விழாவினை 15.08.2020 அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் | மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் | அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தலாகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் :
Screenshot_20200808_080119

Screenshot_20200808_080138

Maternity Leave benefits to non-permanent married Women Government Servants - GO Published.

 

G.O Ms.No.91 Dt: July 28, 2020   Fundamental Rules - Maternity Leave under Fundamental Rule 101 (a) - Extending Maternity Leave benefits to non-permanent married Women Government Servants appointed in a regular capacity - Amendment to Fundamental Rules - Orders - Issued.
Screenshot_20200807_193625

Screenshot_20200807_193646

Thursday, May 7, 2020

ஓய்வு பெறும் வயது 59ஆக அதிகரிப்பு - ஜாக்டோ-ஜியோ கடும் கண்டனம்

பள்ளி, கல்லுாரிகள் திறக்க ஐ.நா., அமைப்பு வழிகாட்டுதல் ....



நாடு முழுதும், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் பள்ளி, கல்லுாரிகளை மீண்டும் திறப்பது குறித்து, யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி உள்ளிட்ட ஐ.நா.,வின் துணை அமைப்புகள், வழிகாட்டுதல்களை அளித்துள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முதல்கட்டமாக, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கடந்த மார்ச், 16ல் மூடப்பட்டன.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள, 154 கோடி மாணவர்கள், பாதிக்கப்பட்டு உள்ளதாக, யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து, ஐ.நா.,வின் துணை அமைப்புகளான யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி மற்றும் உலக உணவு திட்டம் உள்ளிட்ட அமைப்புகள், சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.அதன் விபரம்:பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், உலகின் பெரும்பாலான மாணவர்களுக்கு, கல்வி மட்டுமல்லாமல், ஆரோக்கியம், ஊட்டசத்து மற்றும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளன.ஆனாலும், மாணவர்களின் நலன், பொது சுகாதார பாதுகாப்பு, சமூக பொருளாதார நிலை, கல்வி நிலையங்கள் திறப்பதில் உள்ள ஆபத்துகள் ஆகியவை ஆராயப்பட்டு, தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று கட்டுப்படுத்தபட்டு, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டவுடன், வகுப்பறைகளில் மாணவர்கள் அமர வைக்கப்படுவதில் மாற்றங்கள் செய்து, விடுதி மற்றும் கேன்டீன்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

GO NO - 51 , DATED : 07.05.2020 - Age of Superannuation of Government Servents, Teachers - Increased to 59 Years - GO Published!


ஆணை:

* அரசு ஊழியர்களின் மேலதிக வயதை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இது தேதியின்படி வழக்கமான சேவையில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.05.2020 முதல் மேலதிக ஓய்வில் ஓய்வு பெறுவதற்கும் பொருந்தும்.

* இந்த உத்தரவு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களுக்கும் மற்றும் அனைத்து அரசியலமைப்பு / சட்டரீதியான அமைப்புகளின் ஊழியர்களுக்கும், அனைத்து மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கமிஷன்கள், சங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

* . தமிழ்நாடு அடிப்படை விதிகளின் 56 வது விதியின் கீழ் தொடர்புடைய விதிகள் மேற்கண்ட அளவிற்கு மாற்றப்படும்.  மேற்கண்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் அதன்படி வழங்கப்படும்.
IMG_20200507_133840

Saturday, February 8, 2020

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு ( GO NO 234 : , DATE : 14.11.2019 )

 

IMG_20200208_204939

சுருக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . சத்துணவுத் திட்டம் - 10024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் ரூ . 501 . 20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைத்தல் -திட்டம் திறம் பட செயல்படுத்துதல்-சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Vegetable Garden Go - Download here...