Tuesday, July 15, 2025
கல்வி வளர்ச்சி நாள் விழா 2025.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.07.2025) கல்விக்கண் கொடுத்த கர்ம வீரர் காமராசரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பின்னர் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், மு. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள், கர்ம வீரர் காமராசர் அவர்களைப் பற்றிய பல சிறப்புச் செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். மாணவர்கள் தமது பேச்சு, பாடல்கள் மூலம் காமராசரின் வாழ்க்கை, செயல்பாடுகள் பற்றி வெளிப்படுத்தினர்.
பின்னர் பேச்சு, கட்டுரை, பாடல், ஓவியம், கதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் உதவி ஆசிரியர் மா. யோகலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment