Wednesday, September 25, 2013

வைரஸ் காய்ச்சல் - 10 கட்டளைகள்

வைரஸ் காய்ச்சலை தடுக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள 10 கட்டளைகள்...........

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் 10 கட்டளைகளை அறிவித்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும். பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.
பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 10% அகவிலைப் படி உயர்வு - அரசாணை

மத்திய அர்சு ஊழியர்களுக்கான 7 வது ஊதியக் குழு

மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்

       மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
            7 வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகள் அளிக்க சராசரியாக 2 ஆண்டுகள் வழங்கப்படும். ஊதியக் குழு அறிவிக்கும் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 6வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
 

Sunday, September 22, 2013

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி

                         இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 04.10.2013 முதல் 10.10.2013 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ( World Space Week ) உயர்நிலை /மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்துதல் சார்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதம்.

click here-World Space Week ( 04.10.2013 to 10.10.2013 )Celebration-Competition for School children reg

சர்வதேச கைகள் கழுவும் நாள் - கொண்டாட்டம்

              அக்டோபர் 15 ஆம் நாள் சர்வதேசக் கைகள் கழுவும் நாளை கொண்டாடுதல் மற்றும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்கள் சத்துணவு உண்ணுவதற்கு முன்பும் / பின்பும் கையினை சோப்பு அல்லது சோப்புக் கரைசல் மூலம் கையினை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதம்

Click here-Celebrate 15thOctober (Global Hand Washing day) , for launching hand washing with soap into the Mid day Meal Scheme in all schools

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்திட வேண்டி பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள கடிதம்.

ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் - இயக்குநரின் அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

DEE - COLLABORATIVE LEARNING THROUGH CONNECTING CLASSROOM ACROSS TAMILNADU REG PROC CLICK HERE...