Tuesday, February 18, 2014

மாவட்ட அளவிலான திறனாய்வுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்


       கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடைபெற உள்ள 1 முதல் 8 வகுப்புகளுக்கான திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத் தாட்கள் மற்றும், பாடத்திட்ட விபரம். 

Achievement Test -Model Question Paper 2014


பாடத்திட்டம்

Std
Tamil
English
Maths
III
II Std 3rd Term & IIIrd std 1st,2nd,3rd term upto January
II Std 3rd Term & IIIrd std 1st,2nd,3rd term upto January
II Std 3rd Term & IIIrd std 1st,2nd,3rd term upto January
IV
III Std 3rd Term & IVth std 1st,2nd,3rd term upto January
III Std 3rd Term & IVth std 1st,2nd,3rd term upto January
III Std 3rd Term & IVth std 1st,2nd,3rd term upto January
V
IV Std 3rd Term & Vth std 1st,2nd,3rd term upto January
IV Std 3rd Term & Vth std 1st,2nd,3rd term upto January
IV Std 3rd Term & Vth std 1st,2nd,3rd term upto January
VI
V Std 3rd Term & VIth std 1st,2nd,3rd term upto January
V Std 3rd Term & VIth std 1st,2nd,3rd term upto January
V Std 3rd Term & VIth std 1st,2nd,3rd term upto January
VII
VI Std 3rd Term & VIIth std 1st,2nd,3rd term upto January
VI Std 3rd Term & VIIth std 1st,2nd,3rd term upto January
VI Std 3rd Term & VIIth std 1st,2nd,3rd term upto January

Std
English
Maths
Science
Social
VIII
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
I, II
Only SABL cards
is the Syllabus

திறனாய்வுத் தேர்வு - அனுமதிச் சீட்டு

                 வரும் 22.02.2014 அன்று நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசியத் திறனறித் தேர்வுக்கான அனுமதிக் கடிதம் கீழ்க்கண்ட சுட்டியில் சென்று தரவிரக்கிக்கொள்ளலாம்.

Monday, February 17, 2014

மாவட்டக் கல்வி அலுவலர்க்கான தேர்வில் மீண்டும் மாற்றம் - முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்

       பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.


         நேரடி டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முன்பு நேரடி டி.இ.ஓ. நியமனத்துக்கு ஒரேயொரு தேர்வுதான் நடத்தப்பட்டு வந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் படித்த பட்ட மேற்படிப்பில் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண் கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்து நேர்முகத் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 40 மதிப்பெண்.தேர்வு முறையில் மாற்றம்பின்னர் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் சேர்த்து (340) அதன் அடிப்படையில் கட் ஆப் மார்க் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டன. அப்போது டி.இ.ஓ. தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவந்தனர். 
                குரூப்-1 தேர்வைப் போன்று டி.இ.ஓ. தேர்வுக்கும் முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.அதில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் கேள்விகள் சேர்க்கப் பட்டன. முதன்மை தேர்வில் 3 தாள்களை கொண்டுவந்தனர். முதல் இரு தாள்களில் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். அதேபோல், 3-வது தாளில் கல்வியியல் பாடத்தில் இருந்து ஆப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.இந்த நிலையில், டி.இ.ஓ. தேர்வில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முதன்மைத் தேர்வில் 3-வது தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களின் பட்ட மேற்படிப்பு பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொது அறிவைப் போல விரிவாக பதில் எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வு, நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

        11 காலியிடங்களை நிரப்ப தேர்வு தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் முதுகலை பட்டதாரிகள்மார்ச் 12-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 (முழு விவரங்கள்)

*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு 

*எஸ்யூவி வகை வாகனங்களுக்கு வரி 20% குறைப்பு 

*மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு 

*வாகனத்துறையில் உற்பத்தி வரி 12%-ல் இருந்து 10% ஆக குறைப்பு 

*வீட்டு வசதிக்கு ரூ8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 

*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு 

*நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைப்பு. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் அமலுக்கு வரும். 

*மேலும் 7 புதிய அணு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்படும். 

*296 தொழில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் அனுமதி நடப்பாண்டில் இலக்கை விஞ்சி ரூ.7 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். 

*உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு சென்னை- பெங்களூர், பெங்களூர்- மும்பை, அம்ரிஸ்தர்- கொல்கத்தா இடையே 3 புதிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

*எங்கள் சாதனைகளுக்குக் காரணம் கடும் உழைப்பு தான். எனக்கு கடும் உழைப்பை போதித்தவர்கள் என் தாயாரும், ஹாவர்டும் நாங்கள் வளர்ச்சியைக் காட்டவில்லை என்பது பொய் பிரச்சாரம். 

*எங்களது 10 ஆண்டு கால சாதனையை வரலாறு தீர்மானிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையினரில் 14 லட்சம் பேர்தான் வங்கி கணக்கு வைத்திருந்தனர். தற்போது 42 லட்சம் சிறுபான்மையினர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.

*ரயில்வே துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ. 29,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு.

*உணவு, எரிபொருள், உரங்களுக்கான மானியமாக ரூ. 2.46 லட்சம் கோடி ஒதுக்கீடு 

*57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

*ஆயுத போலீஸ் படையை வலுப்படுத்த ரூ11,009 கோடி ஒதுக்கீடு.

*நாட்டில் 7 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

*10 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறைக்கு ரூ. 7,248 கோடி ஒதுக்கப்பட்டது 

*கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 36,400 கோடி ஒதுக்கினோம்.

*வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ1,200 கோடி ஒதுக்கப்படும்.

*ஆதார் அட்டை வழங்குவதை முழுமையாக செயல்படுத்துவோம்.

*பாதுகாப்பு துறைக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக 10% நிதி ஒதுக்கீடு 

*நாட்டில் 4 மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும். 

*செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தி்யாவும் இணைந்துள்ளது.

*ஆதார் அட்டையை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

*பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ7 ஆயிரம் கோடி. 

*சுகாதாரத்துறைக்கு ரூ33,725 கோடி ஒதுக்கீடு உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத சாதனையாக 26 கோடி டன்னை எட்டியுள்ளது. 

*சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஏற்றுமதியில் சாதனை நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 

*சென்னை- பெங்களூரை இணைக்கும் சரக்கு போக்குவரத்துக்கான ஆய்வுப்பணி நடக்கிறது. 

*ஐமு அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6.2%- ப.சி 

*சென்னை- பெங்களூர், பெங்களூர்- மும்பை, அமிர்தசரஸ்- கொல்கத்தா தொழில்பூங்காக்கள் அன்னிய நேர முதலீட்டை மேலும் தாரளமாக்கி அதிக முதலீடு ஈர்க்கப்படும்- ப.சி. 

*வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு கூடுதல் நிதி அடுத்த ஆண்டு நிர்பயா நிதிக்கு ரூ1000 கோடி ஒப்புதல். 

*2013-14ல் உணவுதானிய உற்பத்திக்கு 263 மில்லியன் இலக்கு- ப.சிதம்பரம் 

*10 ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ10,145 கோடி 

*10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ79,251 கோடி 

*யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய அரசின் நிதி உதவி அதிகரிக்கப்படும்- ப.சிதம்பரம் 

*மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி 3.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு 

*50 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 5.2% ஆக இருக்கும் 

*பண மதிப்பு நிலையானதாக இருக்கிறது.

*ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது- ப.சி. ஐமு கூட்டணியின் 

*கடந்த 10 ஆண்டுகால சாதனையை வரலாறு தீர்மானிக்கும்: ப.சிதம்பரம் உணவுப் பணவீக்கம் கவலை தருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. உற்பத்தித் துறையில் தேக்கம் தொடர்கிறது. உற்பத்தித் துறையில் முதலீடுகளும் குறைந்துள்ளது கவலை தருகிறது. 

*பணவீக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளது.

*உற்பத்தி துறையில் முதலீடு குறைந்துள்ளது கவலையளிக்கிறது- ப.சிதம்பரம் 

*நாட்டின் ஏற்றுமதி 326மில்லியன் டாலராக இருக்கும்- ப.சிதம்பரம் 

*7 புதிய விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

*நாட்டின் பணவீக்க விகிதம் 5.05%ஆக குறைந்துள்ளது- ப.சிதம்பரம் 

*8 தேசிய உற்பத்தி மண்டலங்களுக்கு அனுமதி- ப.சிதம்பரம் 

*நிதிப்பற்றாக்குறை 4.6% ஆக கட்டுப்பாட்டில் உள்ளது-ப.சிதம்பரம் 

*ஐமு ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சி 4% ஆக அதிகரிப்பு.

*நடப்பாண்டில் வேளாண்துறை வளர்ச்சி 4.6% ஆக இருக்கும்.

          திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும். 

Thursday, February 13, 2014

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மாவட்டக் கல்வி அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான (11 பணியிடங்கள்) தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1
4/2014 14.02.2014
DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE
14.02.2014
12.03.2014
06.06.2014
Apply Online

தமிழக பட்ஜெட் சில துளிகள்...

Photo: தமிழக பட்ஜெட் சில துளிகள்...

தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 பட்ஜெட் தாக்கல்
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

திமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ரூ.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம்:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும். 

காவல்துறைக்கு ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு:

காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ரூ.1,260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த சென்னையில் அக்டோபரில் சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும்.

ரூ. 100 கோடி செலவில் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் ரூ.105 கோடியில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9,235 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ. 2,308 கோடியில் தார் சாலையாக மாற்றப்படும்.

காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு படைக்கு இயந்திரங்கள் வாங்க வரும் நிதியாண்டில் ரூ.189.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுக்காப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டு தொகையில் ரூ.65 கோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும்.

விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து திருத்தப் பணியை மேற்கொள்ள ரூ.300 கோடியில் திட்டம்

ரூ.300 கோடி திட்டத்துக்கு 2014-15ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டாவது பசுமைப் புரட்சி திட்டம் பலன் தர தொடங்கி உள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை துறைத் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும்.

கரும்பு சாகுபடி திட்டத்துக்கு 12,500 ஏக்கர் பரப்பு விரிவுபடுத்தப்படும்.

2014-15-ல் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.5000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு.

பயிர்க்கடனை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.

வட்டி சலுகைகள் அளிக்க ரூ.200 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் 10 இடங்களில் நகர்ப்புற பொதுச்சேவை மையங்கள் துவங்கப்படும்.

நகர்ப்புற பொதுச்சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார். 

சென்னை மாநகராட்சியில் 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படும்.

இதர மாநகராட்சிகளிலும் பொதுச்சேவை மையம் விரைவில் தொடங்கப்படும்.

நீர்ப்பாசன துறைக்காக ரூ.3,669 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

104 அணைகளில் புனரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

28 அணைகளில் நீரியல் ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டன.

வரும் நிதியாண்டில் அணை புனரமைப்பு திட்டத்துக்கு ரூ.329.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் 1500 கி.மீ. நீள சாலைகள் அகலப்படுத்தப்படும்.

3500 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தவும் வரும் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரூ.684 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை வெளிவட்ட சாலை முதல் காட்டப் பணி ரூ.1081 கோடியில் மேற்கொள்ளப்படும்.

வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணி ரூ. 1075 கோடியில் மார்ச்சில் தொடங்கும்.

சாலை மற்றும் பாலம் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனத்திடம் ரூ.2000 கோடி நிதியுதவி பெறப்படும்.

35 லட்சம் குடும்பத்துக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

விலையில்லா பொருட்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இளைஞர் திறன் மேம்பாடு

காஞ்சி மாவட்டம் ஒரகடத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் இயங்குகிறது.

வரும் ஆண்டில் இரு இடங்களில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

நெல்லை, கங்கைகொண்டான், திருவள்ளூர், தேர்வாய்க்கண்டிகையில் மையங்கள் அமைக்கப்படும்.

சுகாதாரத்துறை

வரும் நிதிஆண்டுக்கு சுகாதாரத்துறைக்கு ரூ.7,005.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.76.13 கோடி செலவில் 64 ஆரம்ப சுகாதார மையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முடிவு

தற்போது உள்ள 100 நகர்புற சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்

9 மாநகராட்சிகள், 77 நகராட்சிகளில் 37 புதிய நகர்புற சுகாதார மையங்கள் வலுப்படுத்தப்படும்.

தற்போது உள்ள 243 நகர்புற சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்.

770 நடமாடும் மருத்துவ குழுக்குள் அமைக்கப்படும்

தேசிய ஊராக சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் ரூ.1,400 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.757.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை, நெல்லையில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை மையத்துடன் கூடிய பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு பிரிவுகளுக்கான ரூ.75 கோடியில் ஒரு புதிய பல மாடி கட்டிடம் கட்டப்படும்.

ரூ.14 கோடி செலவில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மேம்படுத்தப்படும்.

ரூ.91 கோடி செலவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிதாக புற நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா கட்டமைப்பு

சுற்றுலா துறைக்கு வரும் நிதி ஆண்டுக்கு ரூ.178.51 கோடி நிதி ஒதுக்கீடு

சுற்றுலா கட்டமைப்பு முதலீட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.

பல்வேறு திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.751.09 கோடி நிதி ஒதுக்கீடு.

உழவர் பாதுக்காப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 பட்ஜெட் தாக்கல்
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

திமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ரூ.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம்:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு:

காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ரூ.1,260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த சென்னையில் அக்டோபரில் சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும்.

ரூ. 100 கோடி செலவில் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் ரூ.105 கோடியில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9,235 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ. 2,308 கோடியில் தார் சாலையாக மாற்றப்படும்.

காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு படைக்கு இயந்திரங்கள் வாங்க வரும் நிதியாண்டில் ரூ.189.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுக்காப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டு தொகையில் ரூ.65 கோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும்.

விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து திருத்தப் பணியை மேற்கொள்ள ரூ.300 கோடியில் திட்டம்

ரூ.300 கோடி திட்டத்துக்கு 2014-15ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டாவது பசுமைப் புரட்சி திட்டம் பலன் தர தொடங்கி உள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை துறைத் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும்.

கரும்பு சாகுபடி திட்டத்துக்கு 12,500 ஏக்கர் பரப்பு விரிவுபடுத்தப்படும்.

2014-15-ல் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.5000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு.

பயிர்க்கடனை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.

வட்டி சலுகைகள் அளிக்க ரூ.200 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் 10 இடங்களில் நகர்ப்புற பொதுச்சேவை மையங்கள் துவங்கப்படும்.

நகர்ப்புற பொதுச்சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார்.

சென்னை மாநகராட்சியில் 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படும்.

இதர மாநகராட்சிகளிலும் பொதுச்சேவை மையம் விரைவில் தொடங்கப்படும்.

நீர்ப்பாசன துறைக்காக ரூ.3,669 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

104 அணைகளில் புனரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

28 அணைகளில் நீரியல் ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டன.

வரும் நிதியாண்டில் அணை புனரமைப்பு திட்டத்துக்கு ரூ.329.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் 1500 கி.மீ. நீள சாலைகள் அகலப்படுத்தப்படும்.

3500 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தவும் வரும் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரூ.684 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை வெளிவட்ட சாலை முதல் காட்டப் பணி ரூ.1081 கோடியில் மேற்கொள்ளப்படும்.

வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணி ரூ. 1075 கோடியில் மார்ச்சில் தொடங்கும்.

சாலை மற்றும் பாலம் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனத்திடம் ரூ.2000 கோடி நிதியுதவி பெறப்படும்.

35 லட்சம் குடும்பத்துக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

விலையில்லா பொருட்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இளைஞர் திறன் மேம்பாடு

காஞ்சி மாவட்டம் ஒரகடத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் இயங்குகிறது.

வரும் ஆண்டில் இரு இடங்களில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

நெல்லை, கங்கைகொண்டான், திருவள்ளூர், தேர்வாய்க்கண்டிகையில் மையங்கள் அமைக்கப்படும்.

சுகாதாரத்துறை

வரும் நிதிஆண்டுக்கு சுகாதாரத்துறைக்கு ரூ.7,005.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.76.13 கோடி செலவில் 64 ஆரம்ப சுகாதார மையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முடிவு

தற்போது உள்ள 100 நகர்புற சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்

9 மாநகராட்சிகள், 77 நகராட்சிகளில் 37 புதிய நகர்புற சுகாதார மையங்கள் வலுப்படுத்தப்படும்.

தற்போது உள்ள 243 நகர்புற சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்.

770 நடமாடும் மருத்துவ குழுக்குள் அமைக்கப்படும்

தேசிய ஊராக சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் ரூ.1,400 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.757.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை, நெல்லையில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை மையத்துடன் கூடிய பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு பிரிவுகளுக்கான ரூ.75 கோடியில் ஒரு புதிய பல மாடி கட்டிடம் கட்டப்படும்.

ரூ.14 கோடி செலவில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மேம்படுத்தப்படும்.

ரூ.91 கோடி செலவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிதாக புற நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா கட்டமைப்பு

சுற்றுலா துறைக்கு வரும் நிதி ஆண்டுக்கு ரூ.178.51 கோடி நிதி ஒதுக்கீடு

சுற்றுலா கட்டமைப்பு முதலீட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.

பல்வேறு திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.751.09 கோடி நிதி ஒதுக்கீடு.

உழவர் பாதுக்காப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.