Friday, January 10, 2014

நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

         நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில் மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
        இந்தியாவில், அரசு மற்றும் தனியார் என சேர்த்து, மொத்தம் 381 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட 50,000 இடங்கள் உள்ளன. நாட்டில், தற்போதைய நிலையில், 2,000 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற நிலை உள்ளது.
               ஆனால் அதை, 1,000 பேருக்கு 1 மருத்துவர் என்பதாக மாற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. மேலும், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளிலும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், அப்பகுதி மக்கள், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.
          மத்திய மற்றும் மாநில மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான, மத்திய நிதியுதவி திட்டம் தொடர்பாக, இந்திய சுகாதார அமைச்சகத்தால், ஒரு செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,000 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
           இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7,500 கோடிகள். மாநில அரசுகளின் பங்கு ரூ.2,500 கோடிகள். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, இதற்கான நிதிப் பகிர்வு விகிதாச்சாரம் 90:10 என்ற அளவில் இருக்கும்.
               ஒரு MBBS இடத்திற்கான தோராயமான மொத்த முதலீடு ரூ.1.20 கோடி. MBBS இடங்களை இந்தளவு அதிகரிப்பது இதுவரை நாட்டில் நடக்காத ஒன்றாகும்.
       மத்திய அரசின் உதவியுடன், மாநிலங்களில் 58 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கும் சுகாதார அமைச்சகத்தின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலமாக, 5,800 புதிய MBSS இடங்களை உருவாக்க முடியும்.
           கடந்த 2000ம் ஆண்டிலிருந்து, சுமார் 9,300 புதிய MBBS இடங்களை அரசு உருவாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை, 1950 - 2000 ஆகிய காலத்திற்கு இடைபட்ட 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை விட அதிகம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

           ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு :
         தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் சிலவினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரியாக உள்ளன என்றும் சரியான விடைகளுக்கு மதிப்பெண் போடவில்லை என்றும் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள். இதில் பல வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டுமே   நிலுவையில் உள்ளன.
எப்போது சான்றிதழ் சரிபார்க்கப்படும்? எப்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவோம்? எப்போது பணிநியமனம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு :
         தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா? எனறு கேட்டதற்கு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
             ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களை வைத்தும் இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
கோர்ட்டு தீர்ப்பு :
    நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தபின்னர்தான் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: 
ஆசிரியர் குரல்

Tuesday, January 7, 2014

பொங்கல் கருணைத் தொகை - அரசாணை வெளியீடு

            அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருணைத் தொகை வழங்குவதற்கான  அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

Monday, January 6, 2014

NMMS -தேர்வு இணையம் மூலம் விண்ணப்பம்

            தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வுக்கு (NMMS EXAMINATION) இணையம் மூலம் விண்ணப்பிக்க கீழ்க் கண்ட தொடுப்பை சொடுக்கி பயனாளர் எண் மற்றும் கடவுச் சொல் கொடுத்து விண்ணப்பிக்கவும். 

Sunday, January 5, 2014

தமிழ் - எண் குறிகள்

எண் குறிகள்

          தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
 
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
எண் ஒலிப்பு

ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

எண் அளவு சொல்
1/320 320 ல் ஒரு பங்கு முந்திரி
1/160 160 ல் ஒரு பங்கு அரைக்காணி
3/320 320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80 80 ல் ஒரு பங்கு காணி
1/64 64 ல் ஒரு பங்கு கால் வீசம்
1/40 40 ல் ஒரு பங்கு அரைமா
1/32 32 ல் ஒரு பங்கு அரை வீசம்
3/80 80 ல் மூன்று பங்கு முக்காணி
3/64 64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20 20 ஒரு பங்கு ஒருமா
1/16 16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10 10 ல் ஒரு பங்கு இருமா
1/8 8 ல் ஒரு பங்கு அரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்கு மூன்றுமா
3/16 16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5 ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4 நான்கில் ஒரு பங்கு கால்
1/2 இரண்டில் ஒரு பங்கு அரை
3/4 நான்கில் மூன்று பங்கு முக்கால்
1 ஒன்று ஒன்று

எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து
100 நூறு
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)
மேலும் சில எண் குறிகள்

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
மேலும் சில இறங்குமுக எண்கள்

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு

10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்

4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு

5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு

300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.

நன்றி  சுப்ரமணியன் கிருஷ்ணன்
YOURS VAAZHGA VALAMUDAN
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
M.A(YOGA)
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610

Saturday, January 4, 2014

அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல

                                             அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்

வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.  
 பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலைவகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார். 
இக்கூட்டத்தில் பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிரைமரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வருவது இல்லை. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும். 
உச்சநீதிமன்றம் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுகல்லில் 12 பள்ளிகளின் பாத்ரூம் கதவு இல்லை, 15 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 347 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. கோவையில் 40 பள்ளிகளில் பாத்ரூம் கதவு இல்லை, 100 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 120 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, மற்ற நான்கு மாவட்டங்களிலும் கழிப்பிட வசதி பிரச்னையை விரைவில் முடிக்க வேண்டும்.     தனியார் பள்ளிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகையை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு இரண்டு முறைகளில் தொகையை பள்ளிகளுக்கு வழங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக கோவையில் 25 பள்ளிகள், கரூரில் 7 பள்ளிகள், நீலகிரியில் 18 பள்ளிகள் என 5 மாவட்டங்களையும் சேர்த்து 70 பள்ளிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்காது. அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகள். 
வரும்கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் பொது தேர்வில் இலக்கை அடைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகல்வி துறைகள் குறித்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி  செய்து இருந்தார்.

           வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.
          பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலைவகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
                 இக்கூட்டத்தில் பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிரைமரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வருவது இல்லை. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்.
              உச்சநீதிமன்றம் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுகல்லில் 12 பள்ளிகளின் பாத்ரூம் கதவு இல்லை, 15 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 347 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. கோவையில் 40 பள்ளிகளில் பாத்ரூம் கதவு இல்லை, 100 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 120 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, மற்ற நான்கு மாவட்டங்களிலும் கழிப்பிட வசதி பிரச்னையை விரைவில் முடிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகையை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு இரண்டு முறைகளில் தொகையை பள்ளிகளுக்கு வழங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக கோவையில் 25 பள்ளிகள், கரூரில் 7 பள்ளிகள், நீலகிரியில் 18 பள்ளிகள் என 5 மாவட்டங்களையும் சேர்த்து 70 பள்ளிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்காது. அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகள்.   வரும்கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் பொது தேர்வில் இலக்கை அடைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகல்வி துறைகள் குறித்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி செய்து இருந்தார்.

Friday, January 3, 2014

எட்டாம் வகுப்பு - தேசிய திறனறித் தேர்வு விண்ணப்பம் மற்றும் மாதிரி வினாத்தாள்.

                          எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) வரும் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது. அது தொடர்பான முக்கிய தகவல்களைப் பெற கீழ்க்கண்ட தொடுப்புகளைச் சொடுக்குக.......
 
விண்ணப்பம் :
http://tndge.in/docs/NMMS-2014.pdf

மாதிரி வினாத்தாள் :
http://tndge.in/docs/NMMS_MODALQUESTIONPAPER.pdf