Monday, May 5, 2014

திறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

            கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
            தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம்.
                8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST

Tuesday, April 29, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் தீர்ப்பு வெளியானது

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் தீர்ப்பு வெளியானது. வெயிட்டேஜ் கணக்கிடுவதில் மாற்றம் செய்ய நீதிபதி உத்திரவு

            5% சதவீத சலுகை மதிப்பெண் 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்படாதது சரியே.
           மேலும் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதில் மாற்ரம் செய்ய அறிவுரை வழங்கி நீதிமன்றம் உத்திரவு

TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED.

 2013 CANDIDATES 5% STANDS CORRECT.

 WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD

(INSTEAD OF MECHANICAL METHOD)


 12th obtained marks converted to 10

   eg. 85% = 8.5 marks
 degree converted to 15

eg. obtained percentage/ 100 X 15

 B.ed obtained percentage/ 100 X 15

 tet mark= obtained tet mark/150 X 60

Thursday, April 3, 2014

10% அகவிலைப்படி உயர்வு அரசாணை

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_96_04_2014.pdf

Tuesday, March 18, 2014

கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம்

          தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

Monday, March 17, 2014

பிளஸ் 2, கணித தேர்வு: தவறான கேள்விக்கு 6 மதிப்பெண், தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, கணித தேர்வு: தவறான கேள்விக்கு 6 மதிப்பெண், தேர்வுத்துறை அறிவிப்பு

            பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
 
               பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறுகையில், ''குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால், சரியான விடை வருகிறது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே,அந்த கேள்வியை, 'அட்டன்' செய்திருந்தால், அதற்குரிய மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என்றார்.அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

              66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல், 15க்குள், இந்த பணி முடிந்தால், அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும், 15 நாள் ஆகும். எனவே, கடந்த ஆண்டைப்போல்,மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு, மே, 9ல், தேர்வு முடிவு ?வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு ?வளியாகவும் வாய்ப்பு உள்ளது.

Saturday, March 15, 2014

நன்றி...... நன்றி....அனைவருக்கும் நன்றி............

                         இன்றைய  (15.03.2014) எனது பிறந்த நாளுக்கு நேற்றும், இன்றும் ஆகிய இரு நாட்களாக அலைபேசி, மின்னஞ்சல், முகநூல் என பல்லூடக வழியாகவும், நேரிலும் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயபூர்வ நன்றிகள் என்றும் உரியது.



                          கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான்......

 எனது மகள் எனக்களித்த பரிசு தனது கைவண்ணத்தில் வரைந்த கண்ணாடி ஓவியம்
 எனது மணைவி எனக்களித்த பரிசு வெள்ளித்தட்டு




 எனது குழந்தைகள் எனக்களித்த வாழ்த்து மடல்கள்.......


Friday, March 14, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் பணி - மதிப்பூதியம்

         2014 நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான    மதிப்பூதியம் (ELECTION DUTY - REMUNERATION DETAILS) கீழக்கண்டவாறு வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது.