Wednesday, July 30, 2014

காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

          கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 36 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

      ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கப்படியலில் 7வது இடத்தில் இருந்தது.

           மல்யுத்தத்தில் 3 தங்கம்: இன்று மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. முதல் தங்கத்தை அமித் குமார் பெற்றுத்தந்தார். அவர், ஆண்கள் பிரிவு 57 கிலோ பிரிவில் எபிக்வெமினோமோ வெல்சனை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

            இந்திய வீராங்கனை வினேஸ், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை, மகளிர் 48 கிலோ பிரிவில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

      3வது தங்கத்தை சுஷில்குமார் பெற்றார். அவர்74 கிலோ பிரிவில், பாகிஸ்தானின் அப்பாசை வீழ்த்தி இந்தியாவுக்கு 10வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.

85 கிலோ பளுதூக்குதல் 85 கிலோ பிரிவில், இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தம் 125 கிலோபிரிவில் இந்திய வீரர் ராஜீவ் தோமர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ளூதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் கிடைத்தது.சந்திரகாந்த் வாளி வெண்கலப்பதக்கம் வென்றார்.

       துப்பாக்கி சுடுதலில் மேலும் பதக்கங்கள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்றும் மேலும் பதக்கங்கள் கிடைத்தன.
        25 மீட்டர் ரேபிட் பைபர் பிரிவில், ஹர்ப்ரீட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

      ஆண்கள் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் மனவ்ஜீத் சந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

        50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப்பதக்கம் வென்றார்.

     இதன் மூலம், இந்தியா 10 தங்கம், 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

           தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

          கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

          தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.


           இதனால் தமிழகத்தில் 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுவது வழக்கம்.
பதவி உயர்வு தாமதமாக� வருவதால் தற்போது 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு மேல்நிலைப் பள�ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த நிலையில் பணியாற்றுபவர்களை மாவட்ட கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: (அவர்கள் தற்போது வகிக்கும் பணியிடம் அடைப்புக்குறிக்குள்)
1) சுப்பிரமணியன் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) & ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
2) சுடலைமுத்து (தலைமை ஆசிரியர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) & மாவட்ட கல்வி அலுவலர், தூத்துக்குடி.
3) முருகானந்தம் (தலை மை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தருமத்துப் பட்டி, திண்டுக்கல் மாவட் டம்) & மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல்.
4) வளர்மதி (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை) & மாவட்ட கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை.
5) ராஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவீரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி.
6) சிவஞானம் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர், திருவண்ணாமலை மாவட் டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.
7) வனஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கலையம்புதூர், திண்டுக்கல் மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
8) லட்சுமி (தலைமை ஆசிரியர், அரசு மேல்ந�லைப்பள்ளி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.
9) நீலவேணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பழையனூர், சிவகங்கை மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சிவகங்கை.
10) தமிழ்ச்செல்வன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கடலூர்.
11) பிச்சையப்பன் (மெட் ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்) & மாவட்ட கல்வி அலுவலர், கடலூர்.
12) பவுன் (தலைமை ஆசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
13) தெய்வசிகாமணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம், அரியலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அரியலூர்.
14) சங்கரராமன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிசேரி, தூத்துக்குடி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி.
15) ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் (தலைமை ஆசிரியர், இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி) & மாவட்ட கல்வி அலுவலர், தென்காசி, நெல்லை மாவட்டம்.

Saturday, July 26, 2014

மாவட்ட செயற்குழுக் கூட்டம்

               தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (26.07.2014) ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. 
                  கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் இரா. பவுன்துரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார். 
          கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சேலம் சரக உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல்,  மாவட்டக் கிளை சார்பில் புதிய மாநிலப் பொருப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடத்துதல் மற்றும் ”ஆசிரியர் இயக்க குரல்” சந்தா சேகரிப்பு இயக்கம் அனைத்து வட்டாரக் கிளைகளிலும் நடத்துதல் உள்ளிட்ட செய்திகளை தனது    உறையில் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாவட்டச் செயலாளர் அவர்கள் இதைச் செயல் வடிவம் பெறத் தக்க அறிவுரைகளை வழங்கிய பின்னர் அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் தமது கருத்துரைகளைப் பதிவு செய்தனர். அதன் பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
தீர்மானங்கள் :
1.  சேலம் சரக உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்கள் பணி சிறக்க இச்செயற்குழு  பாராட்டு தெரிவிக்கிறது.
2. வரும்  12.10.2014 அன்று தளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில் புதிய மாநிலப் பொருப்பாளர்களுக்கு பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடத்துதல்.
3. அனைத்து வட்டாரங்களிலும் ”ஆசிரியர் இயக்க குரல்” சந்தா சேகரிப்பு இயக்கம் நடத்தி, 300க்கும் அதிகமான ஆயுட் சந்தாக்களை  சேர்த்து 12.10.2014 விழாவில் மாநில பொருப்பாளர்களிடம் வழங்குதல்.
               இன்றைய கூட்டத்தில் ஊத்தங்கரை, மத்தூர். ஒசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி ஆகிய ஒன்றியங்களின் பொருப்பாளர்களும், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி, உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.
             இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத்அக்பர் அனைவருக்கும் நன்றி கூறினார்.





















"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு

           மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.


            இக்கூட்டமைப்பு மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில், ஈரோட்டில் இருந்து, பென்ஷனர்கள், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:உயர்ந்து வரும் மருந்துகளின் விலை, மருத்துவ கட்டணம், வயது முதிர்வு போன்றவைகளை கணக்கிட்டு, மாத மருத்துவப்படியை, 2,500க்கு குறையாமல் வழங்குதல். 50க்கு பதில், 65 சதவீதமும், 30க்கு பதில், 45 சதவீத குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷன், குடும்ப பென்ஷன், 3.96 மடங்கு திருத்தம் செய்ய வேண்டும். திருந்திய பென்ஷன், குடும்ப பென்ஷன் அமலாகும் நாளுக்கு பின் உள்ளவர்களைவிட, முன் உள்ளவர்களுக்கு குறைவு ஏற்படுவதை நிவர்த்தி செய்ய வேண்டும். குறைந்த பட்ச, அதிகப்பட்ச ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.பத்தாண்டுகளுக்கு பதில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அல்லது, 50 சதவீதம் டி.ஏ., உயர்வில், பென்ஷன், குடும்ப பென்ஷன் திருத்த வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்தம், 12 ஆண்டாக, ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்க வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். வீட்டு வாடகைப்படி அனுமதிக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, மனுவாக அனுப்பி வைத்தனர்.

15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

             பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

Saturday, July 12, 2014