Saturday, October 18, 2014
TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை
23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி
நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு
இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள்
சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதும்
இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும்
கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.
Friday, October 17, 2014
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் சந்திப்பு………
இன்று கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி
அலுவலர் திரு ஜி. இராஜேந்திரன் அவர்களை அவரது அலுவலகத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டக்
கிளை சார்பில் சந்தித்தோம்.
அப்போது அவர் நமது இயக்கத்தின் மீதும் இயக்கக்
கோட்பாடுகள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தமையும், அகில இந்திய
துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய செயலாளர் மரியாதைக்குறிய
அண்ணன்
வா. அண்ணாமலை அவர்களின்
செயல்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டமை மன மகிழ்வைத் தந்தது.
அதே சமயத்தில் அவர் மாவட்டக் கல்வி வளர்ச்சியில்
காட்டிய அக்கரையும், அதை மேம்படுத்திட மேற்கொள்ள உள்ள அடுத்தகட்ட செயல் திட்டங்களையும்
கூறி அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வேண்டியது
பாராட்டத்தக்கது. தாம் பணியாற்றும் காலத்தில் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி சிறந்து
விளங்கிட வேண்டுமென்ற அவரின் அவா நிறவேற எமது இயக்க ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பையும்
வழங்குவதாக நாங்கள் உறுதி அளித்தோம்.
மேலும் அவர் ஆசிரியர்கள் தேவைகள், பிரச்சனைகள்
எதுவாக இருந்தாலும் தொலைபேசி வாயிலாக தமக்குத் தெரிவித்தாலே போதும், தான் அவற்றை உடன்
நிறைவேற்றித் தருவதாகவும், நேரில் வந்துதான் தெரிவிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும்
கூறியமை அவர் மீது மிகுந்த மரியாதையை மேலோங்கச்செய்தது. அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Wednesday, October 15, 2014
ஆன்லைன் மூலம் சம்பள பில் அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல் எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கருவூலம் மூலம்
சம்பளம் மற்றும் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும்,
சம்பந்தப்பட்ட தலைமை அலுவலர், தமக்கு கீழ் உள்ள அரசு ஊழியருக்கான சம்பள
பில் தயாரித்து, கருவூலத்தில் சமர்பிக்க வேண்டியிருந்தது. கடந்த சில
ஆண்டுகளாக, சம்பள பில் பெறுவதை, காகித கோப்புகளாகவும், சிடி வடிவிலும்,
பெறப்பட்டு வந்தது. இதன்மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள்
சம்பளம் பெறும் தலைப்பு, மொத்த செலவு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிட
முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது கருவூலத்துறை கணினிமயமாக்கப்பட்டு
வருகிறது. இதனால், அக்டோபர் மாத சம்பளம் முதல், ஆன்லைனில் பில்
சமர்பிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது ஒவ்வொரு
பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் தனித்தனியே, "யூசர் ஐடி', "பாஸ்வேர்டு'
வழங்கப்படும். கருவூலத்துறை இணையதளத்தில் இ-பே ரோல் எனும் பகுதியில், இதை
பயன்படுத்தி, அலுவலர்களின் பில்களை, ஆன்லைனில் சமர்பிக்கலாம்.
பின் வழக்கம் போல, வங்கிக்கணக்குகளில், "இ.சி.எஸ்' முறையில் சம்பளம்
வழங்கப்பட்டுவிடும். ஆவணங்களாக தயாரித்து வழங்கி வந்த முறையை, ஒழித்துள்ள
நிலை, தலைமை அலுவலர்களின் பணி பளுவை வெகுவாக குறைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு அக்டோபர் மாதத்துக்கான சம்பள பில்களை,
"ரிகர்சல்' போல், ஆன்லைனிலும், பதிவு செய்துவிட்டு, ஆவணமாகவும் தரலாம்
எனவும், அடுத்த மாதம் கண்டிப்பாக, ஆன்லைன் முறையில் மட்டுமே, பில்
சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பில் தயாரிக்கும்
பணியில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று
சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆன்லைனில் பில் சமர்பிப்பது குறித்து
பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சேலம் கருவூல பணியாளர்கள் கலந்து கொண்டு
பயிற்சியளித்தனர்.
Sunday, October 12, 2014
நோபல் பரிசு வென்ற இந்தியர்கள் - தாகூர் முதல் கைலாஷ் வரை
இந்தியக் குடிமக்கள்
மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு,
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர்
ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமார்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த்
குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும்,
பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸக்கு 2006-இல் அமைதிக்கான
நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.
இந்தியாவில் வாழ்பவர்
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் கடந்த 1959
முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடும் இந்தியாவைச் சேர்ந்த சமூக
ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு
உள்ளது. பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன், அவர் இந்த பரிசை பகிர்ந்து
கொள்கிறார்.
Subscribe to:
Posts (Atom)