Tuesday, March 17, 2015

கருத்தாய்வு மைய நிகழ்வில் பங்கு பெறும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஈடுசெய் விடுப்பு அனுமதி ஆணை...

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல்

                பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

Thursday, March 12, 2015

ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி

                அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Sunday, March 8, 2015

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜேக்டோ பேரணி....


           இன்று (08.03.2015) கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து நிலை ஆசிரியர் சங்கங்களின் ஆசிரியர்களும்  எழுச்சியுடன் கலந்துக்கொண்டனர். இப்பேரணியில் 3000க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.
        கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீள அதே இடத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் வந்த இருபால் ஆசிரியர்களும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.

















































Thursday, March 5, 2015

08.03.2015 ஜேக்டோ பேரணிக்கான ஆசிரியர் சந்திப்புகள்........


               08.03.2015 அன்று நடைபெற உள்ள ஜேக்டோவின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கான, ஊத்தங்கரை ஒன்றியத்தில் அனைத்து ஆசிரியர் இயக்க பொருப்பாளர்களும் ஒன்று சேர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்து ஒன்றியம் முழுமையும் உள்ள அனைத்து துவக்க, உயர்துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரிடையாகச் சென்று ஆசிரியர்களை சந்தித்து பேரணியில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
  அதில் எனது தலைமையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகள்..........