Wednesday, September 2, 2015

தமிழக ஆசிரியர் கூட்டணியின் - வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம்



இன்று 02.09.2015 தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் சார்பில், மத்திய அரசு 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள  தொழிற்சங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் திரு கி. கோபால் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் மத்திய அரசு 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், இதனால் ஆசிரியர்களாகிய நாம் எந்த அளவுக்கு பாதிப்படைய உள்ளோம் என்பது குறித்தும் விரிவாகப் பேசினார்.
இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு த. செல்வம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணிச் செயலாளர் திருமதி க. தமிழ்ச்செல்வி, திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திருமதி ச. சித்ரா, திருமதி க. சரஸ்வதி, திருமதி இரா. சாந்தா, திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திரு கி. நாகேஷ், திரு மு. சம்பத், திரு க. அன்பு, திரு கா. சக்திவேல், திரு இரா. இராஜா, திரு ஆ. மணிவண்ணன்  உள்ளிட்ட ஏராளாமான ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.








Sunday, July 19, 2015

மாவட்ட செயற்குழுக் கூட்டம்.......

                 தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (19.07.2015) கெலமங்கலம் ஒன்றியம் ஆர். குட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
              முன்னதாக மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது  தலைமை உரையில் இயக்கதின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வட்டாரக் கிளைகளின் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகப் பேசினார். பின்னர் பேசிய மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் மாவட்டக் கிளையின்  செயல்பாடுகள் பற்றியும் இன்றைய கூட்டத் தீர்மானங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார். 
         அடுத்து கிளைப் பொருப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
              ஆகஸ்ட் 1 அன்று சென்னையில் நடைபெற உள்ள ஜேக்டோ சார்பிலான மாபெரும் தொடர்முழக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் பொருப்பாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுதல்.
தீர்மானம் : 2.
                      அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நமது இயக்க முன்னாள் பொதுச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்களுக்கு இம்மாவட்டச் செயற்குழு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.     
தீர்மானம் : 3.
                     முகநூலை சமூக அக்கறையோடும், மக்கள் பயன்பாட்டு வழியிலும் பயன்படுத்தி வருவதற்காக  காஞ்சி  முத்தமிழ் சங்கம் வழங்கும் “முகநூல் வேந்தர்” விருது பெறும் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கும், சிறந்த சமூகச் சேவைக்காக “அன்னை தெரேசா விருது” மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி மா. ஜோதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 4.
              இதுவரையில் 2015ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை முடிக்காத கிளைகள் உடன் முடித்து இம்மாத இறுதிக்குள் மாவட்ட/மாநில பங்குத் தொகைகளை செலுத்திட முடிவு செய்யப்படுகிறது.







Saturday, July 18, 2015

3120 பக்க NMMS RESULT ல் தேர்வான மாணவர்களின் பெயர்களை காண்பது எப்படி?

         240 பக்க தகவல்கள் ஒரே நீள் வரிசையில் வரவேண்டியவை . excel   to pdf convert செய்யும் பொது பல பக்கமாக மடங்கி உள்ளது. உங்கள் மானவர்ன் விவரங்கள் அடங்கிய அணைத்து பக்கங்களையும் வரிசைபடுத்தி print எடுக்கவும்.( excel  copy  வெளியிடப்படவில்லை )




Tuesday, July 14, 2015

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு

           பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு