Thursday, May 7, 2020

GO NO - 51 , DATED : 07.05.2020 - Age of Superannuation of Government Servents, Teachers - Increased to 59 Years - GO Published!


ஆணை:

* அரசு ஊழியர்களின் மேலதிக வயதை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இது தேதியின்படி வழக்கமான சேவையில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.05.2020 முதல் மேலதிக ஓய்வில் ஓய்வு பெறுவதற்கும் பொருந்தும்.

* இந்த உத்தரவு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களுக்கும் மற்றும் அனைத்து அரசியலமைப்பு / சட்டரீதியான அமைப்புகளின் ஊழியர்களுக்கும், அனைத்து மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கமிஷன்கள், சங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

* . தமிழ்நாடு அடிப்படை விதிகளின் 56 வது விதியின் கீழ் தொடர்புடைய விதிகள் மேற்கண்ட அளவிற்கு மாற்றப்படும்.  மேற்கண்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் அதன்படி வழங்கப்படும்.
IMG_20200507_133840

Saturday, February 8, 2020

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு ( GO NO 234 : , DATE : 14.11.2019 )

 

IMG_20200208_204939

சுருக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . சத்துணவுத் திட்டம் - 10024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் ரூ . 501 . 20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைத்தல் -திட்டம் திறம் பட செயல்படுத்துதல்-சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Vegetable Garden Go - Download here...

Monday, November 4, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு



கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மத்தூர், ஒசூர், தென்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய்  மாவட்ட சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார்.
மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது கருத்துரையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இயக்கச் செயல்பாடுகள் குறித்தும், மாநில,மாவட்ட, வட்டார உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் உணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், டெங்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க் கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்தூர் கல்வி மாவட்டம்
1.   மாவட்டத் தலைவர்      :    சா. இராஜேந்திரன்,உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அத்திகானூர்
2.   மாவட்டச் செயலாளர்    :    செ. இராஜேந்திரன்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஜோதிநகர்.
3.   மாவட்டப் பொருளாளர்   :    த. செல்வம், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அ.பள்ளத்தூர்
4. மாவட்ட மகளிர் அணி    :   பொ. கௌரம்மாள்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி.
5.   மாவட்ட து. தலைவர்    :    இரா.இராமாண்டவர்,
உதவி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி
6. மாவட்ட து. செயலாளர்:  பா.ஜியாவுல்லா, உதவி ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, மத்தூர்
7.   மாவட்ட தணிக்கைக் குழு :   சி. மாதையன், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, மாடற அள்ளி

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட மாநிலப் பொருளாளர் திரு க. சந்திரசேகர் அவர்கள் புதியதாக தேர்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து இயக்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின்,  அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்றினார். அதில் அவர் ஆசிரியர் இயக்கங்களின் போராட்ட வரலாறு பற்றியும், இன்றைய ஆசிரியர்கள் பெற்று வரும் பல்வேறு உரிமைகள், கடந்த கால ஆசிரியப் போராளிகளின் தியாகத்தால் பெற்றுத் தந்தவை என்றும் கூறினார். மேலும் கல்வித் துறையின் இன்றைய இக்கட்டான சூழலில் ஆசிரியர்கள் அதிக விழிப்போடும், கடமை உணர்வோடும் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
தேர்தலை தமிழக ஆசிரியர் கூட்டணியின், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு இரா. சென்னகேசவன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேலம் ஊரகம் கல்வி மாவட்டத் தலைவர் திரு ச. மதியழகன் ஆகியோர் ஆணையாளர்களாக செயல்பட்டு நடத்தினர்.
நிகழ்வில் மத்துர், ஒசூர், தென்கனிக்கோட்டை கல்வி மாவட்டப் பொறுப்பாளர்களும், ஊத்தங்கரை, மத்தூர், ஒசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.
     இறுதியில் ஒசூர் வட்டாரச் செயலாளர் திருமதி வே. அருள் எழிலரசி  அனைவருக்கும் நன்றி கூறினார்.


















Friday, October 11, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம்



தமிழக ஆசிரியர் கூட்டணி, ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (11.10.2019) ல் ஊத்தங்கரையில் நடைபெற்றது.

ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் தலைவர் திரு கி. நாகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு வட்டாரக் கிளையின்  செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். 

சிறப்பு அழைப்பாளராக மத்தூர் கல்வி மாவட்டக் கிளையின், மாவட்டச் செயலாளர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டார். அவர் தனது சிறப்புரையில் இன்றைய தொடக்கக் கல்வித் துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், அரசு மற்றும் கல்வித் துறையால் புதுமை என்ற பெயரால் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் பல்வேறு பணிச் சுமைகளால் மாணவர்களுக்கு கற்பிக்கும் நேரம் பெருமளவு பாதிக்கப்படுவது குறித்து தமது கவலையை பகிர்ந்துக் கொண்டதோடு, கல்வித் துறையோடு தொடர்பில்லாத பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள்  தாம், கல்வியில்/பள்ளியில்/ஆசிரியர்களிடையே பல புதிய மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தும்,  அவர்களின் கருத்துக்கள் உள்ளடக்கிய பயிற்சிகளையும், திட்டங்களையும் அப்படியே ஏற்று அரசு பள்ளிகளில் மட்டும் புகுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேலும் அரசு பள்ளிகளில் துவக்கப்பட்ட மழலையர் வகுப்புகளுக்கு கற்பிக்க துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை கட்டாய மாறுதல் மூலமும், மாற்றுப் பணி மூலமும் நியமனம் செய்யப்பட்டவர்களை உடனடியாக திரும்ப சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கோ அல்லது தேவையான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திலோ நியமிக்க வேண்டுமெனவும், தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, இன்னும் வேலையில்லாமல் இருப்பவர்களை அப்பணியிடத்தில் நியமனம் செய்து கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொண்டார்.

 மேலும் ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஓராண்டுக்கும் மேலாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் 47 இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடம் உள்ளதை சிறப்பு கவனம் கொண்டு உடன் நிரப்பிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் : 1
தற்போது ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஏற்கனவே 47 இடைநிலை ஆசிரியர் (தகுதியுள்ள) பணியிடம் காலியாக உள்ளதால் ஒன்றிய துவக்கக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இக்காலிப் பணியிடங்களை நிரப்பி ஒன்றியத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வித் துறையையும், மாநில தொடக்கக் கல்வித் துறையையும் கேட்டுக் கொள்ளல்.

தீர்மானம் : 2.
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்க ஓர் இடைநிலை ஆசிரியர் கூட இல்லாத நிலையில், இதுவரையில் மாற்றுப் பணியில் கூட யாரையும் நியமிக்காமல் உள்ளதற்கு இச்செயற்குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதோடு, உடன் மாற்றுப் பணியில் இடைநிலை ஆசிரியர் நியமித்து அப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்றலுக்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தீர்மானம் : 3. 
     கடந்த ஜூலை 2019 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி 5%ஐ மத்திய அரசு அறிவித்த நிலையில்  தமிழக அரசும் உடனடியாக வழங்க  அரசை கேட்டுகொள்ளல்.

தீர்மானம் : 4.
     தமிழக கல்வித் துறையில் இன்று பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் திறன்பேசியை தொடர்ந்து வகுப்பறையில் பயன்படுத்தி கற்பிக்க  வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் தரமான, கற்றல்/கற்பித்தல் செயலிகள் பதிவிரக்கம் செய்யப்பட்ட விலையில்லா திறன்பேசியை வழங்கிட தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்
தீர்மானம் : 5.
     தமிழகத்தில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி  அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசு துவக்கப் பள்ளிகள் அனைத்தும் புதிய பொழிவு பெறும் பொருட்டும், மாணவர்களை கவர்ந்து ஈர்க்கும் பொருட்டும் அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி அனைத்து பள்ளிக் கட்டிடங்களுக்கும் வர்ணம் பூசிடவும், பலவண்ண ஓவியங்கள் வரையவும், தமிழக கல்வித் துறை முயற்சி மேற்கொண்டு, தமிழக அரசை வலியுறுத்த கேட்டுக் கொள்ளல்.

தீர்மானம் : 7.
     பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும் தற்போது இணைய மின்னஞ்சல் மற்றும் குறுஞ் செய்திகள் வழியே தற்போது வழங்க வேண்டி உள்ளதாலும், மாணவர்களுக்கு இணைய வளங்கள் மூலமே கற்றல்/ கற்பித்தலை நிகழ்த்த வேண்டி உள்ளதாலும் அனைத்து துவக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் அகன்ற கற்றை இணைய இணைப்பு வசதியுடன் கூடிய மடிக்கணினி வழங்கிட தொடக்கக் கல்வித் துறையைக் கேட்டுகொள்ளல். 

(இயக்க சார்பு தீர்மானங்கள்)

தீர்மானம் : 1.
     இயக்க சட்ட விதிமுறைகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டிய வட்டார மற்றும் மாவட்ட கிளைத் தேர்தல்களை இம்மாத இறுதிக்குள் முறையாக திட்டமிட்டு நடத்திட முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் : 2.
     நவம்பர் 2019 மாதத்திற்குள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் உள்ளிட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருப்பாளர்கள் அனைவரையும் அழைத்து வட்டாரக் கிளையின் சார்பில் முப்பெரும் விழா நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இறுதியில் வட்டார செயற்குழு உறுப்பினர் திரு பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

     கூட்டத்தில், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, கல்வி மாவட்டப் பொருளாளர் திரு த. செல்வம் செயற்குழு  உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, இராமாண்டவர், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.