Wednesday, May 6, 2015

ஆங்கில வழி கல்வி: விளம்பரம் செய்ய உத்தரவு .......

  'அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இருப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* தமிழக அரசின், கல்வித்துறை சார்ந்த நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
* அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், உடனடியாக முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை துவங்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 
* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஊர்வலம் நடத்த வேண்டும்.
* அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடத்தப்படுகிறது என்பதை, சுவரொட்டிகள் ஒட்டியும், ஊர்வலங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment