Friday, August 2, 2024

பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - கலந்தாலோசனைக் கூட்டம்.....

இன்று (02.08.2024) ல் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பபட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு பற்றி கலந்தாலோசித்து, விவாதிக்கப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, இன்றைய கூட்டத்தின் முக்கியமான நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். அதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் பணிகள், உறுப்பினர்கள்களின் தகுதி ஆகியவை பற்றி விரிவாக விளக்கி, இம்மாதம் 31ஆம் தேதி புதியதாக தேர்வு வேண்டிய பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்கள் கலந்தாலோசித்து புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை ஒருமனதாக பரிந்துரை செய்தனர். அதன்படி இப்பள்ளிக்கு 24 பேர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளர். இதன் அடிப்படையில் பதிய பள்ளி மேலாண்மைக் குழு அமையும். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் பூ.இராம்குமார், கோ. ஆனந்தன், மா.யோகலட்சுமி, மு. அனிதா, கணிணி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment