Tuesday, January 14, 2014

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: 

        தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
             பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
                   சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
          பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
           மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
        பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம். பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
                பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
                    பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
          பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
          விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
          விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது. பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது. இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது?
          அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
           சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:

     உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
               தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
              சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
           சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
 
நன்றி :
 TNKALVI.COM

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் விபரம்....

                   ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத
மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். 


              பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்குதகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண்,பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின்
அடிப்படையில் நியமனம் நடைபெறும். 
பகிர்ந்தளிக்கும் மதிப்பெண்கள் விபரம் :
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், 
பிளஸ்–2 தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், 
பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், 
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள். 

               தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். 
மதிப்பெண்ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு :
12–ம் வகுப்பு 
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்
பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்

 50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண் 
 பட்டப் படிப்பு 
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
 50சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண் 
50சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண் 
பி.எட்.படிப்பு 
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15மதிப்பெண் (முழு மதிப்பெண்) 
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண் 
தகுதித்தேர்வு 
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண் 
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண

Sunday, January 12, 2014

பொங்கல் வாழ்த்து !



பொங்குக பொங்கல் !

பொங்குகவே பொங்கல் பொங்குகவே
மங்களம் எங்கும் நிறைந்திடவே
மாநிலம் முழுதும் செழித்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தித்திக்கும் கரும்பின் சுவையும்
தெவிட்டாத பொங்கலின் ருசியும்
என்றும் வாழ்வில் நிலைத்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

உலக அமைதியின் ஊற்றுக்கண்ணாய்
உலகசமாதான  தூதர்களாய் செயல்படும்
ஒப்புயர்வற்ற தமிழர்களின் வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தங்கத் தமிழாம் எந்தமிழை
சந்தம் மாறாமல் முழங்கி
சங்கம் வளர்த்திட்ட தமிழர்வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தரணி புகழும் தமிழின்
தலைமகனே தன்மானமிக்க தமிழனே
உங்கள் அனைவரின் வாழ்விலும்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

உலகாளும் உயர்செம் மொழியாம்
எங்கள் தாய்த்தமிழ் மொழியின் 
வளர்ச்சிக்கு உழைப்போர் இல்லங்களில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

அன்புடன் ………….
கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை – 635207
அலைபேசி: 9842712109 / 7402732132, தொ.பே: 04341-223011/223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com

Saturday, January 11, 2014

TRB - TET சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம்

         TRB - TET சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தை டி.ஆர்.பி. வெளியிட்டுள்ளது. அதனைப் பெற நீங்கள் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வுக்கான கீழ்க்கண்ட தொடுப்புகளைச் சுட்டி

தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு - விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

            தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து 

              தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இறுதி நாளான 10.01.2014 க்குப் பதிலாக   11.01.2014 முதல் 20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு.

TRB-TET:ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு.

தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை



        அலைபேசியில் தங்களது மதிப்பெண்ணை காண இயலாது.எனவே, உங்களது மதிப்பெண்ணை உடனடியாக அறிய தங்களது தேர்வு எண்ணை Comment box-ல் குறிப்பிடவும் Online உள்ள நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள்.மாற்றம் உள்ள நண்பர்கள் தங்களது பழைய மதிப்பெண்ணையும் புதிய மதிப்பெண்ணையும் பதிவு செய்யவும்.

Friday, January 10, 2014

4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்: - அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு

          பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டது. முதல் பிரிவில் 1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும், கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

        இந்த பிரிவின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 95,470 மாணவர்கள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக இந்த பிரிவின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளனர். 

         2வது பிரிவில் பள்ளிகளில் தவகல் தொழில்நுட்ப திட்டம்(ஐசிடி) செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்காக 75 சதவீதமும், மாநில அரசின் பங்காக 25 சதவீதமும் செலவிடப்பட உள்ளது. இந்த தகவல் தொடர்பு திட்டம் 4,340 அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். அதாவது ‘உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்’ என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். 

           பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்க தனியாருக்கு டெண் டர் விடப்படுகிறது. அவர்களே   அந்த லேப்களில் தலா ஒரு ஆசிரியரை நியமித்துக் கொள்வார்கள். 5 ஆண்டு களுக்கு   அந்த  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பிறகு, அரசிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். இதற்கான டெண்டரை அரசு கடந்த வாரம் வெளியிட்டது. ஒரு லேப் அமைக்க குறைந்தபட்ச தொகையாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ள னர். இதைத்தொடர்ந்து பல கம்ப்யூட்டர் நிறுவன ங்கள் டெண்டர் எடுக்க போட்டி போடுகின்றன.

            தற்போதுள்ள அரசின் சில திட்டங்களுக்கு கம்ப்யூட்டர்களை பொருத்திய சில நிறுவனங்களில், 2 கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மீது அரசு அதிருப்தியில் உள்ளது. ஆனால் அந்த 2 கம்ப்யூட்டர் நிறுவனங்களும் மேற்கண்ட டெண்டர் எடுக்க களத்தில் இறங்கியுள்ளன. அந்த 2 நிறுவனங்கள் கையில் மேற்கண்ட திட்டம் போனால், இந்த திட்டமே சீர்குலைந்துவிடும் என்று அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். 27 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறப்போகும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.277 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த டெண்டர் விண்ணப்பங்கள் 31ம் தேதி பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.