Friday, February 21, 2014

டிட்டோஜேக் - பள்ளிக் கல்வித் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை......

 

       டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
  பேச்சு வார்த்தையின் போது அரசு தரப்பில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக பதிலளிக்கப்பட்டது. எனினும் நிதி தொடர்பான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

   பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று நபர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர்  தெரிவித்தார்.
  எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
 

Thursday, February 20, 2014

டிட்டோஜேக் உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்......

 Rakshith Kp's photo. 
 
        இன்று மாலை நடைபெற்ற டிட்டோஜேக் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
       இன்று (20.02.2014) மாலை நடைபெற்ற டிட்டோஜேக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜேக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு

* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.

* 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

* 03.02.2014 அன்று டிட்டோஜேக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

          மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜேக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது..

           அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என நாளை நடைபெறும் செயலாளருடன் சந்திப்பின் போது வலியுறுத்தப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படியில் 50% ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்திட மத்திய அரசு திட்டம்.

          மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, அரசு அதை ஏற்பு செய்யும் வரையில் அரசு ஊழியர்கள் பயன்பெறும் பொருட்டு, தற்போது பெறும் அகவிலைப்படியில் 50% ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்திட மத்திய அரசு திட்டம்.

    Cabinet approved terms of reference for 7th CPC, including merger of 50 per cent DA with basic pay

    As per Hindu Businessline News the Cabinet approved terms of reference for seventh pay commission. This includes merging dearness allowance above 50 per cent with basic pay. The excerpt of Hindu Businessline News is reproduced below:-
   Ahead of general election, the Centre today took key decisions to woo minorities and Government employees.
   For minorities, the Cabinet has decided to form equal opportunity commission as suggested by Sachhar Committee. This commission will suggest ways to ensure equal opportunities in jobs, education and even finding house on rent for minorities. The commission is expected to be constituted soon.
Terms of reference for 7th pay commission
       In order to benefit over 50 lakh employees and over 30 lakh pensioners, the Cabinet also approved terms of reference for seventh pay commission. This includes merging dearness allowance above 50 per cent with basic pay. Currently DA is around 90 per cent of basic pay and another hike of 10 per cent is expected soon. DA is calculated on the basis of change in retail inflation.
http://www.thehindubusinessline.com/economy/policy/cabinet-okays-setting-up-of-equal-opportunity-commission-coal-regulator/article5708924.ece

டிட்டோஜேக்கின் இன்றைய பேச்சு வார்த்தை.........

டிக்டோஜாக்-2013-ன் முதல் வெற்றி
Rakshith Kp's photo.
தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜேக் சந்திப்பு நிறைவடைந்தது.
    இன்று (20.2.2014)காலை டிட்டோஜேக் நிர்வாகிகளை தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் நேரடியாக அழைத்து 7 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார்.

   கிட்டதட்ட 90 நிமிடங்களுக்கு மேலான இந்த சந்திப்பில் நமது கோரிக்கையின் நியாயங்களை ஒவ்வொரு இயக்கத்தின் தலைவர்களும் விரிவாக பேசினர். இயக்குநர் அவர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து அனைத்து விசயங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டார்.
     இந்த விசயங்கள் அனைத்தையும் உடனடியாக கல்வித்துறை செயலரிடம் எடுத்துரைப்பதாகவும், கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களை டிட்டோஜேக் தலைவர்களுடன் சந்திக்கும் ஏற்பாட்டை இன்று மாலைக்குள் தெரிவிப்பதாகவும் இன்முகத்துடன் கூறினார்.

    இச்சந்திப்புக்கு முன்னதாக காலை 10 மணிக்கு டிட்டோஜேக் கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குநரகம் பார்வையாளர் அறையில் நடந்தது. இதில் இயக்குநரிடம் விவாதிக்க வேண்டிய விசயங்கள் விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பில்
  >தமிழக ஆசிரியர் கூட்டணி,  
 > தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
>தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
>தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
>தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
>தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய டிட்டோஜேக் உறுப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

      அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை டிட்டோஜேக் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

   தொடக்கக் கல்வி இயக்குநர் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு. டிட்டோஜேக்கை கேட்டுக்கொண்டதற்கு மார்ச் 6 ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என கூறினர்.

         மொத்தத்தில் டிட்டோஜேக் போராட்டத்தில் அரசாங்கம் தன் முதல்அடியை எடுத்து வைத்துள்ளது.

முடிவு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருத்திருப்போம்...

Tuesday, February 18, 2014

மாவட்ட அளவிலான திறனாய்வுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்


       கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடைபெற உள்ள 1 முதல் 8 வகுப்புகளுக்கான திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத் தாட்கள் மற்றும், பாடத்திட்ட விபரம். 

Achievement Test -Model Question Paper 2014


பாடத்திட்டம்

Std
Tamil
English
Maths
III
II Std 3rd Term & IIIrd std 1st,2nd,3rd term upto January
II Std 3rd Term & IIIrd std 1st,2nd,3rd term upto January
II Std 3rd Term & IIIrd std 1st,2nd,3rd term upto January
IV
III Std 3rd Term & IVth std 1st,2nd,3rd term upto January
III Std 3rd Term & IVth std 1st,2nd,3rd term upto January
III Std 3rd Term & IVth std 1st,2nd,3rd term upto January
V
IV Std 3rd Term & Vth std 1st,2nd,3rd term upto January
IV Std 3rd Term & Vth std 1st,2nd,3rd term upto January
IV Std 3rd Term & Vth std 1st,2nd,3rd term upto January
VI
V Std 3rd Term & VIth std 1st,2nd,3rd term upto January
V Std 3rd Term & VIth std 1st,2nd,3rd term upto January
V Std 3rd Term & VIth std 1st,2nd,3rd term upto January
VII
VI Std 3rd Term & VIIth std 1st,2nd,3rd term upto January
VI Std 3rd Term & VIIth std 1st,2nd,3rd term upto January
VI Std 3rd Term & VIIth std 1st,2nd,3rd term upto January

Std
English
Maths
Science
Social
VIII
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
VII Std 3rd Term & VIIIth std 1st,2nd,3rd term upto January
I, II
Only SABL cards
is the Syllabus

திறனாய்வுத் தேர்வு - அனுமதிச் சீட்டு

                 வரும் 22.02.2014 அன்று நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசியத் திறனறித் தேர்வுக்கான அனுமதிக் கடிதம் கீழ்க்கண்ட சுட்டியில் சென்று தரவிரக்கிக்கொள்ளலாம்.

Monday, February 17, 2014

மாவட்டக் கல்வி அலுவலர்க்கான தேர்வில் மீண்டும் மாற்றம் - முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்

       பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.


         நேரடி டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முன்பு நேரடி டி.இ.ஓ. நியமனத்துக்கு ஒரேயொரு தேர்வுதான் நடத்தப்பட்டு வந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் படித்த பட்ட மேற்படிப்பில் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண் கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்து நேர்முகத் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 40 மதிப்பெண்.தேர்வு முறையில் மாற்றம்பின்னர் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் சேர்த்து (340) அதன் அடிப்படையில் கட் ஆப் மார்க் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டன. அப்போது டி.இ.ஓ. தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவந்தனர். 
                குரூப்-1 தேர்வைப் போன்று டி.இ.ஓ. தேர்வுக்கும் முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.அதில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் கேள்விகள் சேர்க்கப் பட்டன. முதன்மை தேர்வில் 3 தாள்களை கொண்டுவந்தனர். முதல் இரு தாள்களில் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். அதேபோல், 3-வது தாளில் கல்வியியல் பாடத்தில் இருந்து ஆப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.இந்த நிலையில், டி.இ.ஓ. தேர்வில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முதன்மைத் தேர்வில் 3-வது தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களின் பட்ட மேற்படிப்பு பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொது அறிவைப் போல விரிவாக பதில் எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வு, நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

        11 காலியிடங்களை நிரப்ப தேர்வு தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் முதுகலை பட்டதாரிகள்மார்ச் 12-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.