Thursday, August 7, 2014

தொடக்கக் கல்வி - ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்



தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மாநில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்


Wednesday, August 6, 2014

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

முதுகலை ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு......

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

             அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான, வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
     கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்த, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கான அரசாணை அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது

ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாத நேர்வுகளில் ஊக்க ஊதியம் அனுமதிக்கக்கூடாது என இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாத நேர்வுகளில் ஊக்க ஊதியம் அனுமதிக்கக்கூடாது என இயக்குனர் உத்தரவு

Wednesday, July 30, 2014

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக பள்ளிகளை தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

       2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

          கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 36 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

      ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கப்படியலில் 7வது இடத்தில் இருந்தது.

           மல்யுத்தத்தில் 3 தங்கம்: இன்று மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. முதல் தங்கத்தை அமித் குமார் பெற்றுத்தந்தார். அவர், ஆண்கள் பிரிவு 57 கிலோ பிரிவில் எபிக்வெமினோமோ வெல்சனை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

            இந்திய வீராங்கனை வினேஸ், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை, மகளிர் 48 கிலோ பிரிவில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

      3வது தங்கத்தை சுஷில்குமார் பெற்றார். அவர்74 கிலோ பிரிவில், பாகிஸ்தானின் அப்பாசை வீழ்த்தி இந்தியாவுக்கு 10வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.

85 கிலோ பளுதூக்குதல் 85 கிலோ பிரிவில், இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தம் 125 கிலோபிரிவில் இந்திய வீரர் ராஜீவ் தோமர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ளூதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் கிடைத்தது.சந்திரகாந்த் வாளி வெண்கலப்பதக்கம் வென்றார்.

       துப்பாக்கி சுடுதலில் மேலும் பதக்கங்கள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்றும் மேலும் பதக்கங்கள் கிடைத்தன.
        25 மீட்டர் ரேபிட் பைபர் பிரிவில், ஹர்ப்ரீட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

      ஆண்கள் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் மனவ்ஜீத் சந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

        50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப்பதக்கம் வென்றார்.

     இதன் மூலம், இந்தியா 10 தங்கம், 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது