Thursday, May 7, 2020

ஓய்வு பெறும் வயது 59ஆக அதிகரிப்பு - ஜாக்டோ-ஜியோ கடும் கண்டனம்

பள்ளி, கல்லுாரிகள் திறக்க ஐ.நா., அமைப்பு வழிகாட்டுதல் ....



நாடு முழுதும், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் பள்ளி, கல்லுாரிகளை மீண்டும் திறப்பது குறித்து, யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி உள்ளிட்ட ஐ.நா.,வின் துணை அமைப்புகள், வழிகாட்டுதல்களை அளித்துள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முதல்கட்டமாக, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கடந்த மார்ச், 16ல் மூடப்பட்டன.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள, 154 கோடி மாணவர்கள், பாதிக்கப்பட்டு உள்ளதாக, யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து, ஐ.நா.,வின் துணை அமைப்புகளான யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி மற்றும் உலக உணவு திட்டம் உள்ளிட்ட அமைப்புகள், சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.அதன் விபரம்:பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், உலகின் பெரும்பாலான மாணவர்களுக்கு, கல்வி மட்டுமல்லாமல், ஆரோக்கியம், ஊட்டசத்து மற்றும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளன.ஆனாலும், மாணவர்களின் நலன், பொது சுகாதார பாதுகாப்பு, சமூக பொருளாதார நிலை, கல்வி நிலையங்கள் திறப்பதில் உள்ள ஆபத்துகள் ஆகியவை ஆராயப்பட்டு, தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று கட்டுப்படுத்தபட்டு, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டவுடன், வகுப்பறைகளில் மாணவர்கள் அமர வைக்கப்படுவதில் மாற்றங்கள் செய்து, விடுதி மற்றும் கேன்டீன்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

GO NO - 51 , DATED : 07.05.2020 - Age of Superannuation of Government Servents, Teachers - Increased to 59 Years - GO Published!


ஆணை:

* அரசு ஊழியர்களின் மேலதிக வயதை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இது தேதியின்படி வழக்கமான சேவையில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.05.2020 முதல் மேலதிக ஓய்வில் ஓய்வு பெறுவதற்கும் பொருந்தும்.

* இந்த உத்தரவு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களுக்கும் மற்றும் அனைத்து அரசியலமைப்பு / சட்டரீதியான அமைப்புகளின் ஊழியர்களுக்கும், அனைத்து மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கமிஷன்கள், சங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

* . தமிழ்நாடு அடிப்படை விதிகளின் 56 வது விதியின் கீழ் தொடர்புடைய விதிகள் மேற்கண்ட அளவிற்கு மாற்றப்படும்.  மேற்கண்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் அதன்படி வழங்கப்படும்.
IMG_20200507_133840

Saturday, February 8, 2020

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு ( GO NO 234 : , DATE : 14.11.2019 )

 

IMG_20200208_204939

சுருக்கம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் . சத்துணவுத் திட்டம் - 10024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் ரூ . 501 . 20 இலட்சம் செலவில் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -சத்துணவு மையங்களில் காய்கறி த்தோட்டம் அமைத்தல் -திட்டம் திறம் பட செயல்படுத்துதல்-சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Vegetable Garden Go - Download here...

Monday, November 4, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு



கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மத்தூர், ஒசூர், தென்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய்  மாவட்ட சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார்.
மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது கருத்துரையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இயக்கச் செயல்பாடுகள் குறித்தும், மாநில,மாவட்ட, வட்டார உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் உணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், டெங்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க் கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்தூர் கல்வி மாவட்டம்
1.   மாவட்டத் தலைவர்      :    சா. இராஜேந்திரன்,உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அத்திகானூர்
2.   மாவட்டச் செயலாளர்    :    செ. இராஜேந்திரன்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஜோதிநகர்.
3.   மாவட்டப் பொருளாளர்   :    த. செல்வம், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அ.பள்ளத்தூர்
4. மாவட்ட மகளிர் அணி    :   பொ. கௌரம்மாள்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி.
5.   மாவட்ட து. தலைவர்    :    இரா.இராமாண்டவர்,
உதவி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி
6. மாவட்ட து. செயலாளர்:  பா.ஜியாவுல்லா, உதவி ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, மத்தூர்
7.   மாவட்ட தணிக்கைக் குழு :   சி. மாதையன், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, மாடற அள்ளி

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட மாநிலப் பொருளாளர் திரு க. சந்திரசேகர் அவர்கள் புதியதாக தேர்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து இயக்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின்,  அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்றினார். அதில் அவர் ஆசிரியர் இயக்கங்களின் போராட்ட வரலாறு பற்றியும், இன்றைய ஆசிரியர்கள் பெற்று வரும் பல்வேறு உரிமைகள், கடந்த கால ஆசிரியப் போராளிகளின் தியாகத்தால் பெற்றுத் தந்தவை என்றும் கூறினார். மேலும் கல்வித் துறையின் இன்றைய இக்கட்டான சூழலில் ஆசிரியர்கள் அதிக விழிப்போடும், கடமை உணர்வோடும் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
தேர்தலை தமிழக ஆசிரியர் கூட்டணியின், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு இரா. சென்னகேசவன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேலம் ஊரகம் கல்வி மாவட்டத் தலைவர் திரு ச. மதியழகன் ஆகியோர் ஆணையாளர்களாக செயல்பட்டு நடத்தினர்.
நிகழ்வில் மத்துர், ஒசூர், தென்கனிக்கோட்டை கல்வி மாவட்டப் பொறுப்பாளர்களும், ஊத்தங்கரை, மத்தூர், ஒசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.
     இறுதியில் ஒசூர் வட்டாரச் செயலாளர் திருமதி வே. அருள் எழிலரசி  அனைவருக்கும் நன்றி கூறினார்.