Monday, December 16, 2013

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் - சந்திப்பு

              இன்று (16.12.2013) ஊத்தங்கரை வட்டாரப் பொருப்பாளர்களின் அறிமுகச் சந்திப்பு உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. 
       வட்டாரச் செயலாளராக செயல்பட்டு வந்த திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மாவட்டத் தலைவராகத் தேர்வு பெற்றதால் புதிதாக வட்டாரச் செயலாளராக திரு சே. லீலாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். எனவே புதிய பொருப்பாளர்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
              நிகழ்வில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி புதிய பொருப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் நலனிலும், ஆசிரியர்கள் நலனிலும் அக்கரை கொண்டு செயல்படும் இயக்கம் என்றும், அலுவலர்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
                     இதில் கலந்துக்கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் ஆகியோர் புதிய பொருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதே வேளையில் ஆசிரியர்களின் அனைத்து பணப் பயன்களையும் தாங்கள் உடனுக்குடன் முடித்து தந்து விடுவதாகவும், அலுவலக பணிகளுக்கு இயக்கம் முழு ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக்கொண்டனர்.
              நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் திரு கி. கோபால், வட்டாரப் பொருளாளர் திரு பூ. இராம்குமார், வட்டார மகளிர் அணிச் செயலாளர் திருமதி க. தமிழ்ச்செல்வி, மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு ந. இராஜசூரியன், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர் திரு மொ. சிதம்பரம், வட்டாரத் துணைச் செயலாளர் திரு மு. இளங்கோவன், வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திரு இரா கண்ணன், திரு பெ. வெங்கடேசன், உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.


No comments:

Post a Comment